என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
    • ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    இந்த இந்திய அணியை கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமென்றால் வெல்லலாம். ஆனால் இந்த வீரர்களைக் கொண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை.

    இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச்செல்ல போகிறீர்களா? 6 மாதத்தில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு பணிகள் இதுதானா?. இது இந்திய அணியை பின்நோக்கி எடுத்துச் செல்கிறது.

    துணை கேப்டன் பதவியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா எப்படி அணியில் இடம் பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    ஐ.பி.எல். தொடரே அணி தேர்வுக்கான முக்கியமானது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பு வீரர்கள் செயல்பட்டதை கருத்தில் கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தார்.

    10-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடக்கிறது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

    இலங்கை அணி விவரம்:

    சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்கே, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, மஹீஸ் தீக்சனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷன்கா.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன.

    இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடாது என்று கூறியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது:

    பாகிஸ்தான் உடனான விளையாட்டு நிகழ்வுகளுக்கான அணுகுமுறை, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த கொள்கையை பிரதிபலிக்கிறது.

    பாகிஸ்தான் உடனான இருதரப்பு தொடர்களை இந்திய அணி புறக்கணிக்கும். இந்திய அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. அதேபோல், பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம்.

    ஆனால் ஆசிய கோப்பையில் விளையாடுவதை நாங்கள் தடுக்க மாட்டோம். ஏனெனில் அது பன்முக நிகழ்வாகும். இருதரப்பு போட்டிகளுக்கு பாகிஸ்தானை இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஐ.சி.சி. தொடராகவே இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என தெரிவித்தது.

    • இந்திய ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் பணியாற்றி வருகிறார்.
    • 2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

    அஜித் அகர்கர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்கள் அணியின் தலைமை தேர்வுக்குழு தலைவராக பணியாற்றி வருகிறார்.

    2023 ஜூலை 4 முதல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் வரை இருந்தது.

    இந்நிலையில் அஜித் அகர்கரின் ஒப்பந்தத்தை ஜூன் 2026 வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது.

    • ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன்.
    • இதனால் கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    இந்திய கிரிக்கெட்டின் சீனியர் வீரரும், மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனுமான அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, மும்பை ரஞ்சி அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஒரு வீரராக மட்டுமே விளையாட முடிவு செய்து இருக்கிறார்.

    புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரகானேதெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டங்களை வென்றது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மரியாதை. புதிய உள்நாட்டு சீசன் தொடங்க உள்ள நிலையில், ஒரு புதிய தலைவரை வளர்த்தெடுக்க இதுவே சரியான நேரம் என்று நான் நம்புகிறேன். எனவே, கேப்டன் பொறுப்பில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

    ஒரு வீரராக எனது சிறந்த பங்களிப்பை அளிப்பதற்கு நான் முழு அர்ப்பணிப்புடன் இருப்பேன். மும்பை கிரிக்கெட் சங்கத்துடன் எனது பயணத்தைத் தொடர்ந்து, மேலும் பல கோப்பைகளை வெல்ல உதவுவேன். வரவிருக்கும் சீசனை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

    என்று ரகானே குறிப்பிட்டுள்ளார். 

    • டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார்.
    • அடுத்து ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரோகித் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    மும்பை:

    இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இதை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 20 ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வானார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அதே நேரத்தில் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு மீண்டும் திரும்பினார். அவருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

    ஷ்ரேயாஸ் ஐய்யருக்கு ஒருநாள் போட்டி கேப்டன் பதவியை கொடுத்து நீண்ட காலம் அவரை அந்த பொறுப்பில் அமர்த்த பி.சி. சி.ஐ. முடிவு செய்கிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க அனுமதிக்கப்படும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவர்களது கடைசி போட்டியாக இருக்கும். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் சுப்ராயன் அறிமுகம் ஆனார்.
    • ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    கெய்ன்ஸ்:

    தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரெனெலன் சுப்ராயன் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஆப்-ஸ்பின்னரான அவர் முதல் ஆட்டத்தில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த நிலையில் அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக கள நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். பந்துவீசும் போது முழங்கை 15 டிகிரி கோணத்துக்கு மேல் வளையக்கூடாது. ஆனால் அவரது பவுலிங் அதை மீறும் வகையில் உள்ளது. 31 வயதான சுப்ராயன் அடுத்த 14 நாட்களுக்குள் தனது பந்துவீச்சு முறையை சரி செய்து சோதனைக்குட்படுத்த வேண்டும்.

    இதன் முடிவு வரும் வரை அவர் தொடர்ந்து பந்து வீசலாம். ஆனால் சோதனையில் தேர்ச்சி பெற தவறினால் பவுலிங் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படும். ஏற்கனவே அவர் இரு முறை இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருப்பது நினைவு கூரத்தக்கது.

    • பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
    • இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மும்பை:

    பேட்ஸ்மேன்களுக்கான புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியான பட்டியலில் முதல் 100 இடங்களில் கூட இருவரது பெயர்களும் இடம்பெறவில்லை.

    கடந்த வாரம் வரை இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் நீடித்து வந்தனர்.

    ஐ.சி.சி. விதிமுறைப்படி, சுமார் 9 மாத காலம் ஒரு விளையாட்டு வீரர் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றால் அவரது பெயர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப்படும் அல்லது ஓய்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டும் இவர்கள் விஷயத்தில்

    நடக்கவில்லை.

    இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    தரவரிசைப் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டது ஒருவேளை இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்களோ என்ற வதந்தி பரவியது.

    2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் இருவருக்கும் என்பதை பிசிசிஐ மறைமுகமாக தெரிவிக்கிறதா எனவும் சாடி வருகின்றனர்.

    பி.சி.சி.ஐ. இருவரையும் ஓய்வுபெறும்படி கட்டாயப்படுத்திவிட்டதா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ரசிகர்களின் பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில் சில மணி நேரங்களுக்குப் பிறகு ஐசிசி தனது தவறைத் திருத்தியது. இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட குழப்பம் எனத் தெரியவந்தது. அதன்பின் ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 2-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும் இடம்பெற்றனர்.

    • எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை வளர்க்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக தகவல்.
    • சுப்மன் கில்லை தவிர்த்து மற்ற வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால், தேர்வுக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் அசத்திய ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சுப்மன் கில்லும் அணியில் இடம் பெறலாம். மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அணியில் இடம் பிடித்ததுடன், துணைக் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற நிலையில், சுப்மன் கில்லிடம் சென்றுள்ளது.

    அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்த நிலையில் துணைக் கேப்டன் பதவி எப்படி சென்றது என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்க வேண்டும் என வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முதலில் அக்சர் பட்டேலைத்தான் துணைக் கேப்டனாக நியமிக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. சுப்மன் கில் பெயர் அவர்கள் மனதில் இல்லையாம்.

    ஆன்லைன் மூலம் கவுதம் கம்பீர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது சுப்மன் கில்லுக்கு அடுத்த மாதம் வந்தால் 26 வயது நிறைவடைகிறது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு யாராவது ஒருவரை வளர்ப்பது அவசியம். அதற்கு கில் தகுந்த நபராக இருப்பார். அவரால் நீண்ட காலத்திற்கு விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. சுப்மன் கில்லை தவிர்த்து சரியான நபரை தேர்வுக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. சூர்யகுமாரிடம் இருந்து கேப்டன் பதவியை பெறுவதற்கு தயாராக இது சரியான நேரம் என்று தேர்வுக்குழு கருதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி சென்றுள்ளது. சுப்மன் கில் கடந்த வருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது. ஒருநாள் போட்டி அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட் அணியில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
    • உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது.

    மும்பை:

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி (53), உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    சிறுநீர் தொற்று காரணமாக டிசம்பர் 2024-ல் தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின், அவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தாலும், அவரது குணமடைதல் மெதுவாகவும் கடினமாகவும் உள்ளது. உடல்நிலை சீராகி வந்தாலும் அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அவரது இளைய சகோதரர் வீரேந்திர காம்ப்ளி தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    வினோத் காம்ப்ளி கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அவருக்காக பிரார்த்தனை செய்யவேண்டும்.

    அவருக்கு பேசுவதில் சிரமம் உள்ளது. அவர் குணமடைய நேரம் எடுக்கும். ஆனால் அவர் ஒரு சாம்பியன், அவர் திரும்பி வருவார். அவர் நடக்கவும் ஓடவும் தொடங்குவார். அவர்மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. நீங்கள் அவரை மீண்டும் மைதானத்தில் பார்க்க முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

    வினோத் காம்ப்ளி இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார்.
    • சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

    ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது.

    அதே போல டி20 கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் குவிப்பதில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ள சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

    இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக தொடக்க வீரராக களமிறங்குவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் தொடக்க வீரராக களமிறங்கி சதங்களை அடித்து மறுவாழ்வு பெற்ற சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    குஜராத்துக்காக நிறைய ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் 3-வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அப்படிப்பட்ட அவரையும் ஷ்ரேயாஸ் ஐயரையும் நீக்கியுள்ளதற்காக நான் சோகமடைந்துள்ளேன்.

    ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கில் வருங்காலத்தில் ஆல் ஃபார்மட் கேப்டனாக இருக்கலாம். ஆனால் 3 ஃபார்மட்டிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சனுடைய இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும். அதனால் சஞ்சு கண்டிப்பாக விளையாடப் போவதில்லை. சுப்மன் தொடக்க வீரராக விளையாடுவார்.

    என்று கூறினார்.

    • ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கேசவ் மகராஜ் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.
    • இலங்கையின் மகேஷ் தீக்சனா, இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடம் பிடித்தனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான (வீரர்கள் தரவரிசை) பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் 1 சதம், 1 அரைசதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா வீரர் டெவால்ட் ப்ரேவிஸ் டி20 பேட்டிங் தரவரிசையில் 89 இடங்கள் முன்னேறி 12-வது இடம் பிடித்துள்ளார்.

    டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதல் இடத்திலும் திலக் வர்மா 2-வது இடத்திலும் தொடர்கின்றனர்.

    ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் (687 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்ற நிலையில் இந்த முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இலங்கையின் மகேஷ் தீக்சனா (671 புள்ளி), இந்தியாவின் குல்தீப் யாதவ் (650 புள்ளி) ஆகியோர் தலா ஒரு இடங்கள் சரிந்து 2-வது மற்றும் 3-வது இடத்திற்கு பின் தங்கினர்.

    ×