என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.

    மெக்காய்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

    இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் பிரீட்ஸ்கே 88 ரன்னும், ஸ்டப்ஸ் 74 ரன்னும் அடித்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜம்பா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 37.4 ஓவரில் 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 84 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா, ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி 5 விக்கெட்டும், பர்கர், செனுரன் முத்துசாமி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே அந்தப் போட்டிகள் அனைத்திலும் 50+ ரன்கள் அடித்துள்ளார்.

    தனது முதல் போட்டியில் 150 ரன்கள் அடித்து அசத்தியவர், அடுத்த 3 போட்டிகளிலும் முறையே 83, 57 மற்றும் 88 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 4 ஒருநாள் போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை பிரீட்ஸ்கே படைத்துள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    இதற்குமுன் இந்தியாவின் நவ்ஜோத் சித்து தனது முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்புகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், கடந்த ஆண்டு டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை போட்டியின் போது திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில், குட்டி ஸ்டோரீஸ் என்ற பெயரில் அஸ்வின் வெளியிட்டுவரும் யூடியூப் நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விருந்தினராக பங்கேற்றார். அப்போது, ஓய்வுமுடிவு குறித்த ராகுல் டிராவிட்டின் கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்குச் சென்று, பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், அது தனக்கு மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

    சும்மா உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக, வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கலாமே என்ற எண்ணத்தில் எடுத்த முடிவு.

    என்று அஸ்வின் கூறினார்.

    • ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.
    • ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    மும்பை:

    இந்திய கிரிகெட் அணியின் 3 நிலைக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றி வந்தார்.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்றதோடு அவர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிக்கு மட்டுமே தற்போது கேப்டனாக இருக்கிறார்.

    இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான இந்திய கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐய்யரை கேப்டனாக நியமிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த செய்தி பொய்யானது என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    மெக்காய்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவரில் 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பிரீட்ஸ்கே 88 ரன்களும், ஸ்டப்ஸ் 74 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், மார்ஷ் 18 ரன்களிலும், லபுஸ்சேன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கிரீன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து அலெக்ஸ் கேரி 13 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 10 ரன்களிலும் நடையை கட்டினர். இதனையடுத்து அணியின் வெற்றிக்கு போராடிய ஜோஷ் இங்கிலிஸ் 87 ரன்களில் அவுட்டானார்.

    இதனால் 37.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 193 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24-ம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    • கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை ரிங்கு சிங் விளாசினார்.
    • ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

    லக்னோ:

    உத்தரப் பிரதேச டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோரக்பூர் லயன்ஸ் மற்றும் ரில் மீரட் மேவரிக்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கோரக்பூர் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மீரட் மேவரிக்ஸ் அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது. 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, கேப்டன் ரிங்கு சிங் களம் புகுந்தார்.

    ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ரிங்கு சிங், 34 பந்துகளில் 57 ரன்களை எட்டியிருந்தார். அதன் பிறகு பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக, கடைசி 14 பந்துகளில் 51 ரன்களை விளாசி மைதானத்தை அதிர வைத்தார். மொத்தமாக 48 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களுடன் 108 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன் காரணமாக மீரட் அணி 18.5 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

    வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு முன் தன் பார்மை நிரூபிக்கும் வகையில் அவர் இந்த ஆட்டத்தை ஆடி இருக்கிறார்.

    இதனால் அணி நிர்வாகத்துக்கு ரிங்கு சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன.
    • பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கேரளாவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது. 

    இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது.

    பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் முதல் அரையிறுதி போட்டி கவுதாத்தி அல்லது இலங்கையில் நடைபெறும். 2-வது அரையிறுதி நவி மும்பையில் நடைபெறும். இறுதிப்போட்டி நவி மும்பை அல்லது இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

    • 49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மெக்காய்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் கெய்ன்ஸ் நகரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 98 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் மார்க்ரம் ரிக்கல்டன் களமிறங்கினர். தொடக்கமே தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மார்க்ரம் டக் அவுட்டிலும், ரிக்கல்டன் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த டோனி டி சோர்சி தனது பங்குக்கு 38 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த பிரீட்ஸ்கே - ஸ்டப்ஸ் இணை சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரீட்ஸ்கே 88 ரன்களிலும், ஸ்டப்ஸ் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பிரெவிஸ் ஒரு ரன்னில் நடையை கட்டினார். பின்வரிசையில் முல்டர் (26 ரன்கள்), மகராஜ் (22 ரன்கள்) தவிர யாரும் தாக்குப்பிடிக்கவில்லை.

    49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 277 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 3 விக்கெட்டுகளும், லபுஸ்சேன், சேவியர் பார்ட்லெட் மற்றும் நாதன் எல்லீஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது. 

    • இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
    • இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.

    சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் இந்த மசோதா சட்டமானால் பெரு நிறுவனங்கள் பல அடி வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் பெட்டிங் கம்பெனிகள். அதிலும் பிரபலமாக விளங்கும் Dream 11, MPL (மொபைல் பிரீமியர் லீக்) ஆகியவை.

    எனவே இந்நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    Dream 11 உடைய தாய் நிறுவனமான Dream sports மற்றும் MPL இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் என MPL தனது LINKEDIN பதிவில் உறுதிப்படுத்தி உள்ளது.  

    • இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது.
    • வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ என்ற சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் யோ-யோ சோதனையுடன் பிரான்கோ என்ற மேலும் ஒரு சோதனையை புதிய அளவுகோலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அந்த சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரான்கோ சோதனை ஏற்கனவே நடைமுறையில் உள்ள யோ யோ சோதனையைவிட கடினமானது. இந்த சோதனையில் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் என்ற 3 கட்டங்கள் உள்ளன. ஒரு தொகுப்பில் 3 தூரங்களிலும் ஓட வேண்டும்.

    இதில் வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும். அந்த 5 கட்டங்களையும் வீரர்கள் 6 நிமிடத்திற்குள் முடித்தால் தேர்ச்சியடைந்ததாக கருதப்படுவார்கள். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் முகமது சிராஜை தவிர மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் இந்த புதிய சோதனை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

    • ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
    • ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    இந்த இந்திய அணியை கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமென்றால் வெல்லலாம். ஆனால் இந்த வீரர்களைக் கொண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை.

    இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச்செல்ல போகிறீர்களா? 6 மாதத்தில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு பணிகள் இதுதானா?. இது இந்திய அணியை பின்நோக்கி எடுத்துச் செல்கிறது.

    துணை கேப்டன் பதவியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா எப்படி அணியில் இடம் பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    ஐ.பி.எல். தொடரே அணி தேர்வுக்கான முக்கியமானது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பு வீரர்கள் செயல்பட்டதை கருத்தில் கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தார்.

    10-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடக்கிறது.

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலன்கா தலைமையிலான அந்த அணியில் முன்னணி ஆல் ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

    இலங்கை அணி விவரம்:

    சரித் அசலன்கா (கேப்டன்), பதும் நிசங்கா, நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ், சதீர சமரவிக்ரமா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்கே, துனித் வெல்லலகே, மிலன் ரத்நாயக்கே, மஹீஸ் தீக்சனா, ஜெப்ரி வான்டர்சே, அசித்த பெர்னாண்டோ, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷன்கா.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ல் நடக்கிறது.

    புதுடெல்லி:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

    இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனையால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து வருகின்றன.

    இந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுமா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எக்காரணம் கொண்டும் இருதரப்பு தொடர்களில் பாகிஸ்தானுடன் விளையாடாது என்று கூறியுள்ளது.

    இதுதொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகம் கூறியதாவது:

    பாகிஸ்தான் உடனான விளையாட்டு நிகழ்வுகளுக்கான அணுகுமுறை, இந்திய நாட்டின் ஒட்டுமொத்த கொள்கையை பிரதிபலிக்கிறது.

    பாகிஸ்தான் உடனான இருதரப்பு தொடர்களை இந்திய அணி புறக்கணிக்கும். இந்திய அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்காது. அதேபோல், பாகிஸ்தான் அணிகளை இந்தியாவில் விளையாட அனுமதிக்க மாட்டோம்.

    ஆனால் ஆசிய கோப்பையில் விளையாடுவதை நாங்கள் தடுக்க மாட்டோம். ஏனெனில் அது பன்முக நிகழ்வாகும். இருதரப்பு போட்டிகளுக்கு பாகிஸ்தானை இந்திய மண்ணில் அனுமதிக்க மாட்டோம். அதேபோல் ஐ.சி.சி. தொடராகவே இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என தெரிவித்தது.

    ×