என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஆஷஸ் டெஸ்ட் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து விளையாடும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 39 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 40 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் விளையாடிய ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிராவிஸ் 69 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
இதன் மூலம் 104 ஆண்டுகளுக்குப் பிறகு AUS vs ENG ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களுக்குள் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பெர்த்தில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவு பெற்றதால், டிக்கெட் விற்பனையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.17 கோடி நஷ்டம் ஏற்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக ரன்களை சேர்த்தது
- தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுறையில் நிதானமாக விளையாடி வரும் வெரெய்ன் 45 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதையடுத்து முத்துசாமி - யான்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய முத்துசாமி சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய யான்சன் அரைசதம் அடித்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி 136 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 424 ரன்களை எடுத்துள்ளது. முத்துசாமி 106 ரன்களுடனும் யான்சன் 50 ரங்களுடனும் களத்தில் உள்ளனர்.
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஸ்ரேயாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- ஸ்ரேயாஸ் அய்யர் மார்ச் வரை எந்த போட்டியிலும் விளையாட முடியாது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் அய்யர். ஒருநாள் அணியின் துணை கேப்டனான அவருக்கு கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஒரு நாள் தொடரில் கேட்ச் பிடித்தபோது இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. மண்ணீரலில் ரத்த கசிவு உருவானது. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் மார்ச் வரை எந்த போட்டியிலும் விளையாட முடியாது என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்கு முன்பு வரை அவரால் எந்த போட்டியிலும் ஆட முடியாது. ஆஸ்திரேலிய தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் 2 ஆட்டத்தில் 72 ரன் எடுத்தார். இந்த ஆண்டில் 10 இன்னிங்சில் 496 ரன்கள் எடுத்தார். சராசரி 49.60 ஆகும். 5 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்ச மாக 79 ரன் எடுத்தார்.
இந்தியா-தென்ஆப்பி ரிக்கா இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 30-ந் தேதி முதல் டிசம்பர் 6-ந் தேதி வரையும் நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் 3 நாட்களில் முடிந்தது.
- கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து விமர்சிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 93 ரன்னில் சுருண்டு கொண்டனர். 30 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 3 நாட்களில் இந்த டெஸ்ட் முடிந்தது. இதனால் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் குறித்து விமர்சிக்கப்பட்டது. பயிற்சியாளர் காம்பீர் விருப்பப்படி பிட்ச் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கொல்கத்தாவை விட கவுகாத்தி ஆடுகளம் சிறப்பாக உள்ளதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென்டோஷேட் தெரிவித்துள்ளார்.
முதல் நாள் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல் நாளில் இரு அணிகளும் ஆட்டத்தை நன்றாக கணக்கிட்டதாக நான் நினைக்கிறேன். இந்திய அணி வீரர்கள் அற்புதமாக நிலைநிறுத்தி கொண்டனர். ஆட்டம் அவர்கள் பக்கம் சென்றபோது எங்களால் ஓரிரு முறை மீண்டும் கால் பதிக்க முடிந்தது. தொடக்கத்தில் பும்ரா விக்கெட் கைப்பற்றினார். பின்னர் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல் பட்டார். முதல் இன்னிங்ஸ் ரன் முக்கியமானதாகும். கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தை விட கவுகாத்தி பிட்ச் சிறந்ததாக இருந்தது" என்று கூறினார்.
- 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார்.
- ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்றே தொடங்கின.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்றே தொடங்கின.
இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஆகியோர் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
- பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்களும் பவுமா 41 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்று 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது முதல் பொறுப்புடன் விளையாடிய முத்துசாமி - வெரெய்ன் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடி வருகிறது.
நிதானமாக விளையாடிய முத்துசாமி அரைசதம் அடித்து அசத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் பவுமாவிற்கு அடுத்தபடியாக முத்துசாமி அரைசதம் அடித்துள்ளார். மறுமுறையில் நிதானமாக விளையாடி வரும் வெரெய்ன் அரைசதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
தென் ஆப்பிரிக்கா அணி 111 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்களை எடுத்துள்ளது. முத்துசாமி 56 ரன்களுடனும் வெரெய்ன் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
- இதில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
துபாய்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், பெர்த் டெஸ்ட் போட்டி முடிந்ததை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 4-லும் வெற்றி பெற்ற நிலையில் 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
நடப்பு சாம்பியன் தென் ஆப்பிரிக்க அணி 66.67 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்கிறது.
இலங்கை அணி 3-வது இடத்திலும், இந்திய அணி 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது.
முதல் டெஸ்டில் தோல்வியடைந்த இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.
கடைசி 3 இடங்களில் முறையே வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.
- 205 ரன்களை இலக்காகக் கொண்டு ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
- தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32.5 ஓவரில் 172 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹாரி புரூக் 52 ரன்கள் அடித்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 132 ரன்களில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
40 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 34.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க் மற்றும் பிரெண்டன் டாகெட் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
205 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இரண்டாவது இன்னிங்சில் 28. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதமடித்து 123 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4வது இன்னிங்சில் சேசிங்கின்போது அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஹாமில்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டி முடிவில் நியூசிலாந்து 2-0 என தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவரில் 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ரோஸ்டன் சேஸ் 38 ரன் அடித்தார்.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 30.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்க் சாப்மன் 64 ரன்கள் அடித்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றி அசத்தியது. மேட் ஹென்றி ஆட்ட நாயகனாகவும், கைல் ஜேமிசன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 128 ரன்கள் அடித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஜெனித் லியாங்கே 41 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் மொகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து, 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாஹிப்ஜாதா பர்ஹான் அதிரடியாக ஆடி 45 பந்தில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 15.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
முத்தரப்பு தொடரில் இலங்கை தான் ஆடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
- சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- டெஸ்ட் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், காயம் காரணமாக தன் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து கில் விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரவது ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதே சமயம் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வர வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. அண்மைய காலங்களில் பண்ட் அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடாததால் கேப்டன் வாய்ப்பு கேஎல் ராகுளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு அதிகப்பமுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக பிசிசிஐ நாளை மும்பையில் தேர்வுக் குழு கூட்டத்தை நடத்தவுள்ளது. அக்கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
- சாம் கரணை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர்.
- அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார்
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் வீரரான சாம் கரண் தனது நீண்ட நாள் காதலி இசபெல்லா கிரேஸிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ப்ரொபோஸ் செய்தார். இசபெல்லாவும் இதனை ஏற்றுக்கொண்டார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.
ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை சாம் கரண் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரண் விளையாடிய காலத்தில் அவரை தமிழ்நாட்டு ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர். இந்நிலையில் டிரேட் முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்கியதற்காக ஜடேஜா மற்றும் சாம் கரணை ராஜஸ்தான் அணிக்கு சென்னை வழங்கியுள்ளது.
இதனால் அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக சாம் கரண் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






