என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.
    • பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது.

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடியுடன் காங்காங் ஜோடி மோதியது.

    இதில் பரபரப்பாக சென்ற முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் காங்காங் ஜோடி வென்றது. தொடர்ந்து ஆடிய 2-வது செட்டையும் அந்த ஜோடியே வென்றது. இதனால் 22-20, 21-13 என்ற செட் கணக்கில் காங்காங் ஜோடி வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த தொடரில் இந்திய வீரர் வீராங்கனைகள் யாரும் அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அணி தான் விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • விப்ராஜ், முதல் இரண்டு ஆட்டங்களில் அழுத்தத்தை உணர்ந்தார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.

    பின்னர் விளையாடிய டெல்லி 17.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி தான் விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி குறித்து டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது:-

    நாங்கள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றபோது, 4-வது போட்டியிலும் வெற்றி சாத்தியமாகும் என்று நினைத்தோம். எல்லோரும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குல்தீப் யாதவ் பல ஆண்டுகளாக ஐ.பி.எல்.லில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது ஒரு நல்ல விஷயம். விப்ராஜ், முதல் இரண்டு ஆட்டங்களில், அழுத்தத்தை உணர்ந்தார். ஆனால் கடைசி ஆட்டத்திலும் இந்த ஆட்டத்திலும் அவர் பந்து வீசிய விதம் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. நாளுக்கு நாள் அவர் முன்னேறி வருகிறார். அவர் கேப்டனுக்கு நம்பிக்கையைத் தருகிறார். அதை விட சிறந்த விஷயம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    • சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய 11 ஆட்டங்களில் 8-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

    5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாக தொடங்கிய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. இதில் சொந்த ஊரில் அடைந்த 2 தோல்வியும் அடங்கும்.

    முல்லாப்பூரில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 201 ரன்கள் எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை அணி இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான அணி கலவையை அடையாளம் காண முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. கடந்த 5 ஆட்டங்களில் 12 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். அது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பீல்டிங்கில் வெகுவாக முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருப்பதால் எஞ்சிய தொடருக்கு மூத்த வீரர் டோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கிறார்கள். இருந்தாலும் தொடக்கம் முதலே வலுவான ஷாட்கள் மூலம் ரன் வேகத்தை அதிகரிக்கும் துடிப்பான பேட்ஸ்மேன்கள் இல்லை. மிடில் வரிசையும் பலவீனமாக தெரிகிறது. டோனி களத்தில் நின்றும் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை.

    பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா, ஆர்.அஸ்வின் ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு (5 ஆட்டத்தில் 85 ரன் மற்றும் 2 விக்கெட்) மெச்சும்படி இல்லை. இதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

    3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்த கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் போராடி தோற்றது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 239 ரன் இலக்கை தூரத்திய கொல்கத்தா 234 ரன் எடுத்து வெற்றியை நெருங்கி கோட்டை விட்டது.

    கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, வெங்கடேஷ் அய்யர், ரகுவன்ஷி, ரிங்கு சிங் நல்ல பார்மில் உள்ளனர். விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ராஜஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற 4 ஆட்டங்களில் 20 ரன்னை கூட தொடவில்லை. இதே போல் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் போதிய பங்களிப்பு அளித்தால் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தங்களுக்குரிய நாளாக அமைந்தால் மிரட்டி விடுவார்கள்.

    மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், 3-வது வெற்றியை குறி வைத்து கொல்கத்தாவும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சுழல் தாக்குதலை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய 11 ஆட்டங்களில் 8-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, பதிரானா.

    கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மொயீன் அலி அல்லது ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.
    • 2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.

    அவருக்கு பதிலாக மீண்டும் எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருதுராஜ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

    லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.

    2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார். 



    • காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
    • தல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனையாக இருந்தவர் வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு பறிபோனது.

    இதைத் தொடர்ந்து மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஜூலானா சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு மாநில அரசின் விளையாட்டுக் கொள்கையின் கீழ் வினேஷ் போகத்துக்கு சலுகை வழங்குவதாக அரியானா அரசு அறிவித்தது. அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி ரூ.4 கோடி ரொக்கப் பரிசு அல்லது அரியானா ஷாஹ்ரி விகாஸ் பிரதிகரன் (HSVP) கீழ் ஒரு நிலம் ஒதுக்கீடு அல்லது 'குரூப் A' அரசு வேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்யலாம் என்று ஹரியானா அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் ரூ.4 கோடி பரிசுத் தொகையை வினேஷ் போகத் தேர்வு செய்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை மாநில அரசிடம் சமர்ப்பித்து உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    நாட்டிலேயே அதிகபட்சமாக அரியானாவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.2.5 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    நிங்போ:

    ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் கலப்பு இரட்டையர் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ ஜோடி, தைவான் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 12-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் டேனியல் அல்ட்மையர் உடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், போர்ச்சுகலின் நுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்ற சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய டெல்லி 169 ரன்கள் எடுத்து வென்றது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்தார்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். ஆர்.சி.பி. பெறும் 2வது தோல்வி இதுவாகும்.

    கே.எல்.ராகுல் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
    • ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மாண்டே கார்லோ:

    மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் அதிரடியாக ஆடிய டி மினார் 6-2, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் மெத்வதேவ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார்.
    • 24 முறை எதிர் திசையில் இருந்த பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி- பெங்களூரு அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.

    ஒரு கட்டத்தில் ஆர்சிபி 3 ஓவரில் 53 ரன்கள் குவித்தது. அடுத்த ஓவரில் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இடையேயான குழப்பத்தால் சால்ட் ரன் அவுட் ஆனார். அதனையடுத்து ஆர்சிபி தடுமாறியது.

    இந்த ரன் அவுட் மூலம் விராட் கோலி களத்தில் இருக்கும் போது 32 ரன் அவுட் சம்பவம் நடந்துள்ளது. அதில் 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார். 24 முறை எதிரில் இருந்தவர் ரன் அவுட் ஆகியுள்ளனர்.

    சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் அடித்த பந்து கம்மின்ஸ் இடம் பிடிபட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை பார்க்காமல் விராட் கோலி பின்னால் திரும்பி கம்மின்ஸ் பந்தை பிடித்தாரா என்று பார்த்தார்.

    இதனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை விராட் கோலி கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் விராட் கோலி கவனித்த போது ஜெய்ஸ்வால் எதிர்முனைக்கே வந்துவிட்டார். மேலும் விராட் கோலி ஜெய்ஸ்வாலை நம்பி ஓடி இருந்தால் நிச்சயம் அந்த ரன்னை எடுத்திருக்கலாம். ஆனால் விராட் கோலி தேவையில்லாமல் ரன் ஓடாமல் நிற்க ஜெய்ஷ்வால் சுலபமாக ரன் அவுட் ஆனார்.

    இதேபோல் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்ஷர் படேல் ஆகியோரும் விராட் கோலியுடன் ஓடும் போது ரன் அவுட் ஆகியுள்ளனர்.

    8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆனதில் 2 முறை ரோகித்துடன் இருக்கும் போது அவர் அவுட் ஆனார். அந்த 2 போட்டியிலும் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகபட்சமாக டிம் டேவிட் 37 ரன்கள் குவித்தார்.
    • டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் - விராட் கோலி களமிறங்கினர்.

    தொடக்கம் முதலே சால்ட் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக 3 -வது ஓவரில் இரண்டு சிக்ஸ் 3 பவுண்டரி விளாசினார். சால்ட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.

    அதனையடுத்து படிக்கல் 1, விராட் கோலி 22, படிதார் 1, லிவிங்ஸ்டன் 4, ஜித்தேஷ் சர்மா 3, குர்ணால் பாண்ட்யா 18 ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    இறுதியில் 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 33 ரன்கள் குவித்தார். டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.
    • அவரது அணி தோல்வியடைந்த போதிலும், ஆட்டநாயகி விருது மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டது.

    மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மேத்யூஸ் ஒரு உலக சாதனையைப் பதிவு செய்தார்.

    அதன்படி இப்போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகி விருதை கைப்பற்றியதன் மூலம் 54 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.

    இருப்பினும் அவரது அணியானது இப்போட்டியில் தோவ்லியைத் தழுவியது. இதன்மூலம் ஒரே போட்டியில் சதம் அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியும், அந்த அணி தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறையாகும்.

    மேலும் மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.

    அவரது அணி தோல்வியடைந்த போதிலும், அவர் இந்த விருதை வெல்வது இது 5-வது முறையாகும். இந்தப் பட்டியலில், அவர் தனது சக நாட்டவரான ஸ்டெஃபனி டெய்லரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த அட்டத்தில் அதிக ஆட்ட நாயகி விருதுகள்

    5-ஹேலி மேத்யூஸ்

    4-ஸ்டஃபானி டெய்லர்

    2-எமி சாட்டர்த்வைட்

    2-நிக்கோலா பிரவுன்

    2-கிளேர் டெய்லர்

    ×