என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெங்களூருவை டெல்லி வீழ்த்தியது: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அக்ஷர் படேல் பாராட்டு
    X

    பெங்களூருவை டெல்லி வீழ்த்தியது: சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அக்ஷர் படேல் பாராட்டு

    • டெல்லி அணி தான் விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • விப்ராஜ், முதல் இரண்டு ஆட்டங்களில் அழுத்தத்தை உணர்ந்தார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூருவில் நடந்த போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது.

    பின்னர் விளையாடிய டெல்லி 17.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி தான் விளையாடி உள்ள 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி குறித்து டெல்லி கேப்டன் அக்சர் பட்டேல் கூறியதாவது:-

    நாங்கள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றபோது, 4-வது போட்டியிலும் வெற்றி சாத்தியமாகும் என்று நினைத்தோம். எல்லோரும் நம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குல்தீப் யாதவ் பல ஆண்டுகளாக ஐ.பி.எல்.லில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது ஒரு நல்ல விஷயம். விப்ராஜ், முதல் இரண்டு ஆட்டங்களில், அழுத்தத்தை உணர்ந்தார். ஆனால் கடைசி ஆட்டத்திலும் இந்த ஆட்டத்திலும் அவர் பந்து வீசிய விதம் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. நாளுக்கு நாள் அவர் முன்னேறி வருகிறார். அவர் கேப்டனுக்கு நம்பிக்கையைத் தருகிறார். அதை விட சிறந்த விஷயம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×