search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Run out"

    • மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர்.
    • தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் அவுட் ஆனது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்சில் 6-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த விக்கெட் கீப்பர் ஜானிபேர்ஸ்டோ (10 ரன்) வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் வீசிய 'ஷாட்பிட்ச்' பந்தை அடிக்காமல் குனிந்து தவிர்த்தார். ஓவர் முடிந்த நிலையில் எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் பேசுவதற்காக உடனடியாக கிரீசை விட்டு வெளியேறினார். அதற்குள் பந்தை பிடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பு மீது சரியாக எறிந்து அப்பீல் செய்தார்.

    டி.வி. ரீப்ளேயை ஆராய்ந்த 3-வது நடுவர் எராஸ்மஸ் இதை ஸ்டம்பிங் என்று அறிவித்தார். இதனால் மிகுந்த அதிருப்தியுடன் பேர்ஸ்டோ நடையை கட்டினர். ஆத்திரமடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் 'இது பழைய ஆஸ்திரேலியா தான். எப்போதும் மோசடி... மோசடி...' என்று கோஷமிட்டனர்.

    மதிய உணவு இடைவேளையில் ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பிய போது சில ரசிகர்கள் அவர்களை திட்டினர். தனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு அவுட்டை பார்த்ததில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மோர்கன் வர்ணனையின் போது விமர்சித்தார்.

    அவர் அவுட் ஆகும் போது ரன் அவுட் என கூறிய நிலையில் போட்டி முடிந்த பிறகு அது ஸ்டெம்பிங் என மாற்றப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவுட்தான் என்றும் நாட் அவுட் என்றும் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது, இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 178 ரன்கள் தேவைப்பட்டது.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 3-வது நடுவர் தெரியாமல் ‘ரெட்’ பட்டனை அழுத்தியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    டி'ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஆரோன் பிஞ்ச் சந்தித்தார். அப்போது பிஞ்ச் அடித்த பந்து நேராக பந்து வீச்சாளரை நோக்கி வந்தது. இமாத் வாசிம் பந்தை தனது கையால் தடுத்தார். பந்து கை விரலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது. அப்போது டி'ஆர்கி ஷார்ட் பேட் க்ரீஸ்க்குள் இருந்தாலும் கிரவுண்டில் உரசியதாக தெரியவில்லை.



    இதனால் 3-வது நடுவர் முடிவிற்கு விடப்பட்டது. அப்போது பலமுறை ரீப்ளே செய்து பார்த்த போதிலும், ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுதான் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    போட்டியின் பிற்பகுதியில் மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நடுவர் தெரியாமல் ரெட் பட்டனை அழுத்தியிருக்கலாம் என தங்களை ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
    ×