என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: சொதப்பிய ஆர்சிபி- டெல்லி அணிக்கு 164 ரன்கள் இலக்கு
- அதிகபட்சமாக டிம் டேவிட் 37 ரன்கள் குவித்தார்.
- டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் - விராட் கோலி களமிறங்கினர்.
தொடக்கம் முதலே சால்ட் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக 3 -வது ஓவரில் இரண்டு சிக்ஸ் 3 பவுண்டரி விளாசினார். சால்ட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
அதனையடுத்து படிக்கல் 1, விராட் கோலி 22, படிதார் 1, லிவிங்ஸ்டன் 4, ஜித்தேஷ் சர்மா 3, குர்ணால் பாண்ட்யா 18 ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 33 ரன்கள் குவித்தார். டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






