என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆசிய கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய டி20 அணியின் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில்லை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் தயார் செய்ய உள்ளதாகவும் இதற்காக தான் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர்-செக் குடியரசின் சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

    இதில், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்- செக் குடியரசின் கேதரினா சினியாகோவாவுடன் களமிறங்குகிறார்.

    ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ்- சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக் உடன் களமிறங்குகிறார்.

    ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ்-பிரிட்டனின் எம்மா ரானுகாடு உடன் களமிறங்குகிறார்.

    போலந்தின் இகா ஸ்வியாடெக்-நார்வேயின் காஸ்பர் ரூட் உடன் களமிறங்குகிறார்.

    இதேபோல், கஜகஸ்தான் எலினா ரிபாகினா, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர்.

    • ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கெய்ன்ஸ்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.

    இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து மார்ஷ் மற்றும் பென் த்வார்ஷுயிஸ் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. பென் த்வார்ஷுயிஸ் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து மார்ஷ் 88 ரன்னிலும் ஆடம் ஜாம்பா 11 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெறுகிறது.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி 18 ஆண்டு கழித்து கோப்பை வென்றது.
    • ஐ.பி.எல். கோப்பை வெல்வது எவ்வளவு கடினம் என இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்றார்.

    புதுடெல்லி:

    நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாகக் கோப்பை வென்றது.

    ஆர்சிபி அணி 18 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் கோப்பையை வென்றது தொடர்பாக ஆதரவான கருத்துகளும், எதிர் கருத்துகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரான அம்பதி ராயுடு தனியார் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ஆண்டுகளில் ஒரு ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது என்றால், 5 கோப்பைகளை வெல்ல அவர்களுக்கு 72 ஆண்டுகள் ஆகும்.

    ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எவ்வளவு கடினம் என்று இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். 5 கோப்பைகளை வெல்வது எவ்வளவு கடினம் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என தெரிவித்தார்.

    • ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
    • ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம்.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது குறித்து அஜித் அகர்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அஜித் அகர்கர் கூறியதாவது:-

    ஷ்ரேயஸை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் யாருக்கு பதிலாக அவரை அணியில் எடுப்பது? அது அவருடைய தவறும் அல்ல, எங்களுடைய தவறும் அல்ல.

    அதேபோல் ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யாததும் துரதிஷ்டவசமானது. அபிஷேக் தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து வருவதாலேயே அவரை அணியில் சேர்த்தோம்.

    என கூறினார்.

    • இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை.
    • ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா (விக்கெட் கீப்பர்).

    இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
    • மகாராஜ் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    கெய்ன்ஸ்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

    அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. ஹெட் 27 ரன்னில் சுப்ரயென் பந்து வீச்சில் ஸ்டெம்பிக் ஆனார்.

    இதனையடுத்து வந்த மார்னஸ் லாபுசாக்னே 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்கிலீஸ் 5, அலெக்ஸ் ஹேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்னில் அடுத்தடுத்து மகாராஜ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

    மகாராஜ் முதல் 4.2 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் அதன்பிறகு விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அவர் 10 ஓவரில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் நடந்து வருகிறது.
    • இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.

    ஷிம்கென்ட்:

    ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.

    இந்நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் 219.7 புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

    ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் மனு பாக்கர் பெற்ற 10வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை.
    • அதிகம் எதிர்பார்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.

    மாற்று தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இடையே போட்டி நிலவிய நிலையில் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கில் இந்த அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவர் துணை கேப்டனாகவே அணியில் இடம் பிடித்துள்ளார்.

    அவரை 3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக செயல்பட திட்டமிட்டுள்ளதால் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதில் முக்கிய வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஷாட் பந்தை அடிக்க தடுமாறுகிறார் என விமர்சனங்கள் அவர் மீது வைத்த நிலையில் ஷாட் பந்தை சிக்சர்களாக பறக்க விட்டு அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் நியூ பந்தில் பந்து வீசும் திறன் உடையவர். அவரும் இடம் பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.

    இவர்களை தவிர ரியான் பராக், துருவ் ஜூரல் அணியில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிராஜ்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளாதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    • மும்பை மற்றும் புறநகரில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
    • சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை மற்றும் புறநகரில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
    • இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்ஷித் ராணா

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த தகுதிச்சுற்று போட்டியில் முன்னணி வீரரும், தரவரிசையில் 18வது இடம் பிடித்துள்ள பிரிட்டனின் டேன் ஈவன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லாய்டு ஹாரிஸ் முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடியாக டேன் ஈவன்ஸ் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை லாய்டு ஹாரிஸ் 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான டேன் ஈவன்ஸ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து விலகினார்.

    ×