என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian womens cricket team"

    • இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை.
    • ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

    இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்கூர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமஞ்சோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யஸ்திகா (விக்கெட் கீப்பர்).

    இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
    • ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வங்கதேச சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் ஒருநாள் மற்றும் டி20 அணியை அறிவித்துள்ளது.

    இந்திய மகளிர் அணி வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 6 போட்டிகளும் மிர்பூரில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்பிஎன்சிஎஸ்) நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மிருதி மந்தனா இரண்டு வடிவிலான போட்டிகளுக்கும் துணைகேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே, வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் மற்றும் பேட்டர் ரிச்சா கோஷ் ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளனர்.இதனால் இந்திய அணி அனுபவமில்லாத பந்து வீச்சாளர்களுடன் விளையாட உள்ளது.

    இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அணி பின்வருமாறு:-

    இந்திய டி20 அணி:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (சி),ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி, அமன்ஜோத் கவுர், மேகனா, மேகனா பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பாரெட்டி, மின்னு மணி.

    இந்திய ஒருநாள் அணி:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (சி), ஸ்மிருதி மந்தனா (விசி), தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா , ஹர்லீன் தியோல், தேவிகா வைத்யா, உமா செத்ரி ,அமன்ஜோத் கவுர், பிரியா புனியா, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், அஞ்சலி சர்வானி, மோனிகா பட்டேல், ராஷி கனோஜியா, அனுஷா பரெட்டி, சினே ராணா. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டி20 போட்டி வரும் 9-தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரங்களும் அடித்தனர்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

    முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 105 ரன்களும் ஜார்ஜியா வோல் 101 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சைமா தாக்கூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதனையடுத்து 372 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 44.5 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியடைந்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 54 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி வரும் 11ம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.

    • அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 435 ரன்கள் குவித்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் அணி 418 ரன்கள் குவித்துள்ளது.

    ராஜ்கோட்:

    அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இதனையடுத்து இரு மகளிர் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 435 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனைகளாக மந்தனா (135), பிரதிகா ராவல் (154) சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    மேலும் அதிக ரன்கள் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4 -வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடங்களில் நியூசிலாந்து அணி உள்ளது.

    இதனையெல்லாம் விட ஒருநாள் போட்டியில் ஆண்கள் இந்திய அணி குவித்த ரன்களை விட பெண்கள் அணி ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. ஆண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 418 எடுத்ததே அதிக ரன்களாக இருந்தது. அதனை தற்போது பெண்கள் முறியடித்துள்ளது.

    இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ரமேஷ் பவார் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #RameshPowar #WomenCricketTeam
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு துஷ்கர் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

    பரோடா முன்னாள் ஆல்ரவுண்டரான அவர் மீது சீனியர் வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். அவரது பயிற்சி முறை சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தன. இதைதொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சரியான பயிற்சியாளர் அமையும் வரை அவரே அந்த பொறுப்பில் தொடர்வார். #RameshPowar #WomenCricketTeam
    ×