search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ramesh powar"

    மிதாலிராஜ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. #MithaliRaj
    வெஸ்ட் இண்டீஸில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இப்போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படவில்லை.

    இதற்கு பயிற்சியாளர் ரமேஷ்பவார்தான் காரணம் என்று மிதாலிராஜ் குற்றம்சாட்டினார். அவர் தன்னை அவமானப்படுத்தி வேண்டுமென்றே நீக்கினார் என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்த ரமேஷ்பவார், மிதாலிராஜ் தன்னை தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று மிரட்டி நெருக்கடி கொடுத்தார் என்று தெரிவித்தார்.



    இருவரின் இந்த மோதல்போக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் பவாரின் பயிற்சியாளர் பதவியின் காலம் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு பதவி காலம் நீட்டிப்பு வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
    மிதாலிராஜ் நீக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். #MitaliRaj #RameshPowar #BCCI
    மும்பை:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார்.

    இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-



    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று பவார் கூறியுள்ளார். மிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒரு நபர், அணியின் மேலாளர் (திருப்தி பட்டாச்சார்யா) மற்றும் தேர்வாளர் (சுதா ஷா) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
    இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் ரமேஷ் பவார் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #RameshPowar #WomenCricketTeam
    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு துஷ்கர் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

    பரோடா முன்னாள் ஆல்ரவுண்டரான அவர் மீது சீனியர் வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்து இருந்தனர். அவரது பயிற்சி முறை சரியில்லை என்று குற்றம்சாட்டி இருந்தன. இதைதொடர்ந்து அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்திய பெண்கள் அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீரர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சரியான பயிற்சியாளர் அமையும் வரை அவரே அந்த பொறுப்பில் தொடர்வார். #RameshPowar #WomenCricketTeam
    ×