என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாத முன்னணி வீரர்கள்- ஒரு பார்வை
    X

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறாத முன்னணி வீரர்கள்- ஒரு பார்வை

    • டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை.
    • அதிகம் எதிர்பார்த்த ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த அணியில் இடம் பெறவில்லை.

    மும்பை:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ், துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டனர்.

    மாற்று தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இடையே போட்டி நிலவிய நிலையில் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கில் இந்த அணியில் இடம்பெறுவாரா இல்லையா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவர் துணை கேப்டனாகவே அணியில் இடம் பிடித்துள்ளார்.

    அவரை 3 வடிவிலான அணிக்கும் கேப்டனாக செயல்பட திட்டமிட்டுள்ளதால் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதில் முக்கிய வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஷாட் பந்தை அடிக்க தடுமாறுகிறார் என விமர்சனங்கள் அவர் மீது வைத்த நிலையில் ஷாட் பந்தை சிக்சர்களாக பறக்க விட்டு அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் நியூ பந்தில் பந்து வீசும் திறன் உடையவர். அவரும் இடம் பெறாதது அதிர்ச்சியாக உள்ளது.

    இவர்களை தவிர ரியான் பராக், துருவ் ஜூரல் அணியில் இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிராஜ்-க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளாதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×