என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய டி20 அணிக்கும் விரைவில் கேப்டனாகும் சுப்மன் கில்? - வெளியான தகவல்
    X

    இந்திய டி20 அணிக்கும் விரைவில் கேப்டனாகும் சுப்மன் கில்? - வெளியான தகவல்

    • ஆசிய கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந்தேதி துபாயில் சந்திக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அவர் அணியில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்திய டி20 அணியின் எதிர்கால கேப்டனாக சுப்மன் கில்லை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவினர் தயார் செய்ய உள்ளதாகவும் இதற்காக தான் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×