என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
    • இதில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஒரு போட்டியில் புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே புனே அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் புனே அணி அபார வெற்றி பெற்றது.

    இது புனே அணி பெறும் ஹாட்ரிக் வெற்றி ஆகும். ஏற்கனவே பெங்களூரு, குஜராத் அணிகளையும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இலங்கை கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்தது.

    ஹராரே:

    இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடி 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா-குசால் மெண்டிஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது.

    பதும் நிசங்கா அரை சதம் கடந்து 55 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 38 ரன்னில் வெளியேறினார். இதற்கு பின் விரைவில் விக்கெட்கள் விழுந்ததால் இலங்கை அணி தடுமாறியது.

    கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் அதிரடி காட்டினார். அவர் 16 பந்தில் 41 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், இலங்கை அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்தது.

    ஹராரே:

    இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னெட் அதிரடியாக ஆடினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    பிரியன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரி உள்பட 81 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

    இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

    துபாய்:

    ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இந்த தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும் உள்ளன.

    இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகியவை 4,5,6 ஆகிய இடங்களில் உள்ளன.

    ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது

    இந்த ஆண்டில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்று மோசமான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்தி இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 8-வது இடத்துக்கு சரிந்துள்ளது.

    இங்கிலாந்து அணி கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன்.
    • எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன்.

    இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் அபார திறமை கொண்டவர். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்தார்.

    2012ஆம் ஆண்டில் அறிமுகமான அவர், 2018ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டுக்கப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக புவனேஷ்வர் குமார் கூறுகையில் "நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை ஓய்வு குறித்து நினைத்ததில்லை. எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன். மற்றவை தேர்வாளர்கள் கையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    35 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் (CSKCL) சேர்மனாக என்.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த நிறுவனம்தான் உரிமையாளர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    2025ஆம் ஆண்டு நிதியாண்டின்படி, EWS பைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 47.08 பங்குகளை வைத்துள்ளது. என்.சீனிவாசன் 0.11 சதவீதம், சித்ரா சீனிவாசன் 0.03 சதவீதம், ரூபாய் குருநாத் 0.01 சதவீதம் பங்குகளையும் வைத்துள்ளனர்.

    சிஎஸ்கே கிரிக்கெட் லிமிடெட் இயக்குனர்கள் குழுவால், என். சீனிவாசன் மற்றும் அவரது மகள் ரூபா குருநாத் ஆகியோர் அந்நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர்களாக நியமிக்கப்பட்டனர். இது கடந்த பிப்ரவரி மாதம் 10ம்தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாகவும், வரவிருக்கும் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பில், அவர்களுடைய நியமனம் குறித்த முறையான அறிவிப்பு தீர்மானம் பங்குதாரர்களுக்கு அளிக்கப்படும் என ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ,இதன் மூலம் முதன்முறையாக சிஎஸ்கே போர்டில் (இயக்குனர்கள் குழுவில்) இருவரும் இணைகிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சிமெண்டில் உள்ள இவர்களுடைய பங்குகளை அல்ட்ராடெக் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கே.எஸ். விஸ்வநான் நிர்வாக இயக்குனராக மூன்று வருடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து 3 வருடம் பதவியில் நீடிப்பார்.

    சிஎஸ்கே 2025 நிதியாண்டில் நிகர லாபத்தில் 20 சதவீதம் சரிவையும், வருவாயில் 4.7 சதவீதம் சரிவையும் எதிர்கொண்டுள்ளது. 644 கோடி ரூபாய் வருவாயும், 181 கோடி ரூபாய் லாபத்தையும் பெற்றுள்ளது.

    இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸை தவிர்த்து தென்ஆப்பிரக்கா கிரிக்கெட் சங்கம் நடத்தும் டி20 லீக்கில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் கிரிக்கெட்டின் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளது. மேலும் வெளிநாடுகளில் கிரிக்கெட் அகாடமியை விரிவுப்படுத்தி வருகிறது.

    சென்னை அணியின் ஆலோசகராக திகழ்ந்து வந்தார். தற்போது அணியின் சேர்மனாகியுள்ளதால், அணிகளுடன் பயணிப்பார். இது அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

    • லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.
    • ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது.

    ஐரோப்பாவில் நடைபெறும் கிளப்புகள் கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது. ஸ்பெயின், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகள் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியது.

    இதற்கிடையே இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் கால்பந்து கிளப்புகள் வீரர்களை பரிமாற்றம் செய்வதற்கான அவகாசம் முடிவடைந்தது.

    அதன்படி அனைத்து கிளப்புகளும் மொத்தமாக ரூ.35 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் மொத்தம் 20 கிளப்புகள் விளையாடி வருகின்றன. இதில் லிவர்பூல் அணி அதிகபட்சமாக 6 வீரர்களை வாங்க ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளது.

    அதற்கு அடுத்தப்படியாக ஆர்செனல் அணி 7 வீரர்களை சுமார் ரூ. 2,641 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. மான்செஸ்டர் யுனைடெட், நியூகேஸ்டல் உள்ளிட்ட கிளப்புகளும் வீரர்கள் மாற்றத்துக்கு பணத்தை அதிகமாக செல வழித்துள்ளன.

    • பிசிசிஐ அனுமதியுடன் கோலி லண்டனில் உடற்தகுதியை நிரூபித்தார் .
    • கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    இதனிடையே லண்டனில் இருந்தபடியே விராட் கோலி.உடற்தகுதியை உறுதிப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மற்ற இந்திய வீரர்கள் பெங்களூரு வந்து உடற்தகுதியை நிரூபிக்கையில், லண்டனில் இருந்தபடியே விராட் கோலி. உடற்தகுதியை பிரூபித்துள்ளார்.

    பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது இவருக்கு மட்டும் ஏன் விலக்கு என பலரும் கேள்வி எழுப்புவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது.

    • ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு RCB Cares தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என RCB Cares அறிவித்துள்ளது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார். 

    • அமெரிக்க வீரர் ஃப்ரிட்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • மகள் பிறந்தநாளை முன்னிட்டு அசத்தல் ஆட்டம் போட்டார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7ஆம் நிலை வீரரான ஜோகோவிச், 4ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸை எதிர்கொண்டார். முதல் செட்டை ஜோகோவிச் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2ஆவது செட்டை 7-5 என கைப்பற்றினார்.

    முதல் இரண்டு செட்களை இழந்த ஃப்ரிட்ஸ் 3ஆவது செட்டில் அபாரமாக விளையாடினார். இதனால் அந்த செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். என்றபோதிலும் 4ஆவது செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ்க்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4 என ஜோகோவிச் 4ஆவது செட்டை கைப்பற்றி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைறுதிக்கு முன்னேறினார்.

    ஜோகோவிச் விளையாடிய போட்டி இந்திய நேரப்படி இன்று காலை முடிவடைந்தது. ஜோகோவிச்சின் மகள் தாராவின் பிறந்த நாள் இன்று. மகளின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றி பெற்ற கையோடு டென்னிஸ் கோர்ட்டில் நடனமாடினார். இது அங்கிருந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • 14ஆம் தரவரிசையில் உள்ள பாம்ப்ரி ஜோடி, 4ஆம் தரவரிசையில் உள்ள ஜெர்மனி ஜோடியை வீழ்த்தியது.
    • ஜெர்மனி ஜோடி கடந்த வருடம் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் உடன் இணைந்து விளையாடி வருகிறார்.

    14ஆம் தரநிலை ஜோடியான பாம்ப்ரி- வீனஸ், தரநிலையில் 4ஆம் நிலை ஜோடியான ஜெர்மனியின் டிம் புட்ஸ்- கெவின் கிராவிட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் பாம்ப்ரி ஜோடி 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி ஜோடி கடந்த அமெரிக்க ஓபனில் 2ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

    காலிறுதியில் நிகோலா மெக்டிக் (குரோசியா) - ராஜீ ராம் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.

    • ஐபிஎல் போட்டியில் விளையாடுவதில்லை என முடிவு எடுத்த நிழைலயில் ILT20 ஏலத்தில் பெயர் பதிவு செய்துள்ளார்.
    • ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அஸ்வின். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடினார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில்லை என அறிவித்தார். இந்திய அணி, ஐபிஎல் போட்டியில் விளையாடாத வீரர் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் அஸ்வின் வெளிநாட்டு லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    அதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி20 (சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதனால் வெளிநாடுகளில் நடைபெறும் லீக்கில் விளையாடுவது உறுதியானது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக்கிலும் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் சிஇஓ டோட் க்ரீன்பெர்க், அஸ்வினுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அஸ்வின் பிக் பாஷ் லீக்கில் விளையாட முன்வந்தால், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவது முதல் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஆவார்.

    ×