என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Byமாலை மலர்12 Oct 2017 7:40 AM GMT (Updated: 12 Oct 2017 7:40 AM GMT)
பெண் நடுவரை அவமதித்த குற்றத்திற்காக இத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி கிராண்ட் ஸ்லாம் விளையாட விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டதாக கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது.
பாரிஸ்:
இத்தாலி டென்னிஸ் வீரரான பாபியோ போக்னினி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது பெண் நடுவரை அவமதிக்கும் வகையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவருக்கு இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் 96 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது தண்டனையை குறைத்து கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது. அவர் மீது போடப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கியதுடன், அபராதத்தையும் 47 டாலராக குறைத்து அறிவித்துள்ளது. இனி மேல் இது போன்ற தவறு செய்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தண்டனையை அவர் எதிர்க்க வில்லை. அதனை ஏற்றுக்கொண்டார் என கிராண்ட் ஸ்லாம் வாரியம் தெரிவித்தது.
இது குறித்து போக்னினி கூறுகையில், 'டென்னிஸ் வாரியம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் நான் அதனை ஏற்றுக்கொள்வேன். என் மீது தவறு உள்ளது. அதனால் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற தவறுகள் இனிமேல் நடைபெறாது' என கூறினார்.
இத்தாலி டென்னிஸ் வீரரான பாபியோ போக்னினி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது பெண் நடுவரை அவமதிக்கும் வகையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் அவருக்கு இரண்டு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் 96 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது தண்டனையை குறைத்து கிராண்ட் ஸ்லாம் வாரியம் அறிவித்துள்ளது. அவர் மீது போடப்பட்ட தடையை தற்காலிகமாக நீக்கியதுடன், அபராதத்தையும் 47 டாலராக குறைத்து அறிவித்துள்ளது. இனி மேல் இது போன்ற தவறு செய்தால் மீண்டும் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தண்டனையை அவர் எதிர்க்க வில்லை. அதனை ஏற்றுக்கொண்டார் என கிராண்ட் ஸ்லாம் வாரியம் தெரிவித்தது.
இது குறித்து போக்னினி கூறுகையில், 'டென்னிஸ் வாரியம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் நான் அதனை ஏற்றுக்கொள்வேன். என் மீது தவறு உள்ளது. அதனால் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இது போன்ற தவறுகள் இனிமேல் நடைபெறாது' என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X