search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
    X

    பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

    பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன
    ஐதராபாத்:

    பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் ஆட்டங்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

    இந்திய அணி 8 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும், இலங்கை அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடமும், இங்கிலாந்து அணி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 4-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்று ஐதராபாத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது. நாளை பெங்களூருவில் நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 
    Next Story
    ×