search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘மகிழ்ச்சி’: இந்திய அணியின் பீல்டிங்கை பாராட்டும் சச்சின் தெண்டுல்கர்
    X

    ‘மகிழ்ச்சி’: இந்திய அணியின் பீல்டிங்கை பாராட்டும் சச்சின் தெண்டுல்கர்

    இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாளை மராத்தான் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கலந்து கொண்டார். அப்போது இன்றைய விளையாட்டு உலகில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், இந்திய அணியின் சிறப்பான பீல்டிங் குறித்தும் அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சச்சின் தெண்டுல்கர் பேசும்போது ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் உலகளவில் சிறந்த பீல்டிங் அணியில் ஒன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து வீரர்களும் பீல்டிங் செய்யும்முறையை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக பீல்டிங் செய்கிறார்கள்.

    நம்முடைய உடற்தகுதி வழக்கம் பொதுவாக சற்று வேறுபட்டது. அதில் விழிப்புணர்வு சற்று குறைந்த காணப்படுகிறது. அது நேரத்தின் அடிப்படையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இறுதியில் இந்த விஷயம் உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது. வெளிப்புற விளையாட்டில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்கு நான் ஆதரவு அளிக்கிறேன்.

    தற்போதைய தலைமுறையினர் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், இன்டர்நெட் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துகிறார்கள். இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. மக்கள் வெளியில் வந்து சில விளையாட்டுக்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இது மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்றார்.
    Next Story
    ×