search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொகாலி டெஸ்ட்: வித்தியாசமான பதாதையுடன் அனைவரையும் ஈர்த்த ரசிகர்
    X

    மொகாலி டெஸ்ட்: வித்தியாசமான பதாதையுடன் அனைவரையும் ஈர்த்த ரசிகர்

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மொகாலி டெஸ்டில் ரசிகர் ஒருவர் பிடித்திருந்த பதாதை அனைவரது பாதையும் ஈர்த்தது.
    பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுக்களை மாற்றி வருகிறார்கள். இதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. பழைய ரூபாய் நோட்டுக்கள் அடுத்த மாதம் 30-ந்தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தை ஏராளமான ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ரசிகர் தன் கையில் உள்ள பதாதையை தூக்கி காண்பித்தார்.

    அதில் பவுண்டரி அடித்தால் பழைய 500 ரூபாயும், சிக்ஸ் அடித்தார் பழைய 1000 ரூபாய் நோட்டும் பரிசாக வழங்கப்படும் என்று எழுதியிருந்தார். தற்போதைய இந்தியாவில் நடைபெற்று வரும் சூழ்நியைில் அனைவரது பார்வையையும் ஈர்த்தது.
    Next Story
    ×