search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்: சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை
    X

    இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட்: சேப்பாக்கத்தில் நாளை டிக்கெட் விற்பனை

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.
    சென்னை:

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    இந்த டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (29-ந்தேதி) தொடங்குகிறது. ரூ.300, ரூ.500, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் ஆகிய விலைகளில் சீசன் டிக்கெட்டுகள் (5 நாட்கள்) விற்கப்படுகிறது.

    ‘சி’ மற்றும் ‘இ’ ஸ்டாண்டில் கீழ்பகுதி ரூ.300 ஆகும். இந்த ஸ்டாண்டின் மேல்பகுதி விலை ரூ.500. சி,டி,இ,எச், ஸ்டாண்டின் ஏசி பாக்ஸ் மற்றும் பெவிலியன் டெரஸ் ரூ.3 ஆயிரமாகும். ஜி ஸ்டாண்டின் ஏ.சி பாக்ஸ் மற்றும் அண்ணா பெவிலியன் ஹாஸ்பிட்டாலிட்டி ஏ.சி பாக்ஸ் விலை ரூ.4 ஆயிரமாகும்.

    சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் டிக்கெட்டுகள் பெறலாம். ஒருவருக்கு 2 டிக்கெட் வழங்கப்படும். கிரிடிட் கார்டும், டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். www.bookmyshow.com என்ற வெப்சைட் மூலமும் டிக்கெட் பெறலாம். தினசரி டிக்கெட்டுகள் போட்டி நடைபெறும் நாட்களில் விற்கப்படும்.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×