என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி](https://img.maalaimalar.com/Articles/2016/Oct/201610291837511779_India-beat-Korea-in-penalty-shootout-to-enter-final_SECVPF.gif)
X
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி
By
மாலை மலர்29 Oct 2016 1:07 PM GMT (Updated: 29 Oct 2016 1:07 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மலேசியாவில் நடைபெற்று வரும் நான்காவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா அரையிறுதியில் தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதியொன்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டத்தின் முழு நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து 2-2 என சமநிலை அடைந்தன. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
முதலில் பெனால்டி வாய்ப்பை அடிக்கும் வாய்ப்பை பெற்ற இந்தியா தொடர்ந்து 5 முறையும் கோல்கள் அடித்தது. தென்கொரியாவின் முதல் நான்கு வீரர்களும் கோல் அடித்தனர். இதனால் 5-4 என இந்தியா முன்னிலையில் இருந்தது.
கடைசி வாய்ப்பை தென்கொரிய வீரர் அடித்தார். அதை இந்திய விக்கெட் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பான வகையில் தடுத்தார். இதனால் இந்தியா ‘பெனால்டி ஷூட்’ முறையில் 5-4 என தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 2012-ல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது. தற்போது 3-வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தின் முழு நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்து 2-2 என சமநிலை அடைந்தன. இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
முதலில் பெனால்டி வாய்ப்பை அடிக்கும் வாய்ப்பை பெற்ற இந்தியா தொடர்ந்து 5 முறையும் கோல்கள் அடித்தது. தென்கொரியாவின் முதல் நான்கு வீரர்களும் கோல் அடித்தனர். இதனால் 5-4 என இந்தியா முன்னிலையில் இருந்தது.
கடைசி வாய்ப்பை தென்கொரிய வீரர் அடித்தார். அதை இந்திய விக்கெட் கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறப்பான வகையில் தடுத்தார். இதனால் இந்தியா ‘பெனால்டி ஷூட்’ முறையில் 5-4 என தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
2011-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 2012-ல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது. தற்போது 3-வது முறையாக இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)