search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கபடி: இந்தியா முதல் வெற்றி பெறுமா? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்
    X

    உலக கோப்பை கபடி: இந்தியா முதல் வெற்றி பெறுமா? ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்

    அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன
    அகமதாபாத்:

    உலக கோப்பை கபடி போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 12 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா ‘ஏ’ பிரிவில் உள்ளது.

    இந்த பிரிவில் வங்காள தேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகள் உள்ளன.

    நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தென் கொரியாவிடம் 32-34 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தது.

    இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இப்போட்டி இரவு 9 மணிக்கு நடக்கிறது. இதில் வென்று இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக இரவு 7 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் (ஏ பிரிவு) அணிகளும், இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் போலந்து-கென்யா (பி பிரிவு) அணிகளும் மோதுகின்றன.
    Next Story
    ×