என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்தவொரு எதிரணியையும் பாகிஸ்தான் துவம்சம் செய்யும்: வெ.இண்டீஸ் வீரர் பத்ரி சொல்கிறார்
Byமாலை மலர்20 Sep 2016 6:13 AM GMT (Updated: 20 Sep 2016 6:13 AM GMT)
எந்தவொரு எதிரணியையும் பாகிஸ்தானால் துவம்சம் செய்ய முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சாமுவேல் பத்ரி சொல்கிறார்.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடக்க இருக்கிறது.
முதலாவதாக டி20 கிரிக்கெட் தொடர் 23, 24 மற்றும் 27-ந்தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் துபாயிலும், கடைசி போட்டி அபுதாபியிலும் நடக்க இருக்கிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இரண்டு அணிகளும் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியான வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 7-வது இடத்தில் உள்ளது. பிராவோ, கெய்ல், பொல்லார்டு, சாமுவேல்ஸ், பத்ரி, நரைன் போன்ற முன்னணி வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட பாகிஸ்தான் அணி பலவீனமாக அணி எனக் கருதப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் அணியால் எந்தவொரு எதிரணியையும் துவம்சம் செய்ய முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பத்ரி கூறுகையில் ‘‘நாங்கள் எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் மரியாதை கொடுப்போம். அதேபோல்தான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கும் நாங்கள் செல்கின்றோம். நாங்கள் மிகவும் சிறந்த முறையில் தயராகியுள்ளோம். பாகிஸ்தான் மிக மிக அபாயகரமான அணி என்பது எங்களுக்குத் தெரியும். போட்டி நடக்கும் அந்த நாள் அவர்களுடையதாக இருந்தால், எந்தவொரு எதிரணியையும் அவர்களால் துவம்சம் செய்ய முடியும்’’ என்றார்.
முதலாவதாக டி20 கிரிக்கெட் தொடர் 23, 24 மற்றும் 27-ந்தேதிகளில் நடக்க இருக்கிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் துபாயிலும், கடைசி போட்டி அபுதாபியிலும் நடக்க இருக்கிறது.
இந்த தொடரில் விளையாடுவதற்காக இரண்டு அணிகளும் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. டி20 கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த அணியான வெஸ்ட் இண்டீஸ் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 7-வது இடத்தில் உள்ளது. பிராவோ, கெய்ல், பொல்லார்டு, சாமுவேல்ஸ், பத்ரி, நரைன் போன்ற முன்னணி வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியைவிட பாகிஸ்தான் அணி பலவீனமாக அணி எனக் கருதப்படுகிறது.
ஆனால், பாகிஸ்தான் அணியால் எந்தவொரு எதிரணியையும் துவம்சம் செய்ய முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பத்ரி கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பத்ரி கூறுகையில் ‘‘நாங்கள் எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு அணிக்கும் மரியாதை கொடுப்போம். அதேபோல்தான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கும் நாங்கள் செல்கின்றோம். நாங்கள் மிகவும் சிறந்த முறையில் தயராகியுள்ளோம். பாகிஸ்தான் மிக மிக அபாயகரமான அணி என்பது எங்களுக்குத் தெரியும். போட்டி நடக்கும் அந்த நாள் அவர்களுடையதாக இருந்தால், எந்தவொரு எதிரணியையும் அவர்களால் துவம்சம் செய்ய முடியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X