search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், மைனெனி தோல்வி
    X

    டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்திய வீரர்கள் ராம்குமார், மைனெனி தோல்வி

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் ராம்குமார், மைனெனி தோல்வி அடைந்தனர்.
    புதுடெல்லி :

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்தியா-ஸ்பெயின் இடையிலான ஆட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. முதலில் இந்திய இளம் வீரர் ராம்குமாருடன், முன்னாள் ‘நம்பர் ஒன்’ புயல் ஸ்பெயினின் ரபெல் நடால் மோதுவதாக இருந்தது. ஆனால் மணிக்கட்டு காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கடைசி நேரத்தில் நடால் விலகினார். இதையடுத்து முதல் சுற்று ஆட்டத்தில் ராம்குமாருடன், இன்னொரு ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோப்ஸ் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 4-6, 4-6, 6-3, 1-6 என்ற செட் கணக்கில் போராடி லோப்சிடம் வீழ்ந்தார். இதைத் தொடர்ந்து நடந்த 2-வது ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிட் பெரர் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் சகெத் மைனெனியை ஊதித்தள்ளினார். இதனால் போட்டியில் ஸ்பெயின் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்று இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்- மைனெனி ஜோடி களம் இறங்க உள்ளது.

    முதல் நாள் போட்டியை காண 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குழுமியிருந்தனர். நடால் விலகியது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. 
    Next Story
    ×