என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.என்.பி.எல்: திண்டுக்கல் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திரில் வெற்றி
Byமாலை மலர்8 Sep 2016 4:51 PM GMT (Updated: 9 Sep 2016 4:45 AM GMT)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
நத்தம்:
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கோபிநாத் 76(53), தலைவன் சற்குணம் 72(50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 60(53) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவிச்சந்திர அஸ்வின் கடைசியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். 5 போட்டிகளில் விளையாடி உள்ள திண்டுக்கல் அணியின் முதல் தோல்வி இதுவாகும்.
76 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் கோபிநாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், திண்டுக்கல் டிராகன்சும் மோதின. திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான கோபிநாத் 76(53), தலைவன் சற்குணம் 72(50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
திண்டுக்கல் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் 60(53) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரவிச்சந்திர அஸ்வின் கடைசியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும். 5 போட்டிகளில் விளையாடி உள்ள திண்டுக்கல் அணியின் முதல் தோல்வி இதுவாகும்.
76 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் கோபிநாத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X