search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சச்சினுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த இளவரசர் வில்லியம் - கேத் தம்பதி
    X

    சச்சினுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த இளவரசர் வில்லியம் - கேத் தம்பதி

    மும்பையில் இன்று சச்சினுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த இளவரசர் வில்லியம் கேத் தம்பதி.
    மும்பை:

    இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மும்பையில் இன்று சச்சின் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

    இன்று பகல் சுமார் 12 மணியளவில் மும்பை நகரை வந்தடைந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதியர் அங்குள்ள தாஜ் ஹோட்டலில் தங்கினார்கள். பிறகு தாஜ் ஹோட்டல் வளாகத்தில் அமைத்துள்ள 2008-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாகுதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அங்கு இருக்கும் குறிப்பு புத்தகத்தில் தங்கள் இரங்களை பதிவு செய்தார்கள்.

    தீவிரவாத தாக்குதலை எதிர்க்கொண்ட தாஜ் ஹோட்டல் ஊழியர்களையும், வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் தம்பதினர் சந்தித்து பேசினார்கள்.

    வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் தம்பதினர் இன்று மாலை தொண்டு நிறுவனங்களுக்கு நிதிதிரட்டுவதற்காக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துக்ககொண்டனர். மும்பையை சேர்ந்த மூன்று தொண்டு நிறுவனங்களின் சார்பில் இந்த போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டியில் இளவரசர் வில்லியமுக்கு சச்சின் பந்து வீசினார். சச்சின் பந்துகளை சிறப்பாக எதிர்க்கொண்டு ஆடிய அவர் பள்ளி மாணவி வீசி பந்தில் ஆட்டமிழந்தார். இளவரசி கேத்தும் சில பந்துளை எதிர்க்கொண்டு விளையாடினார். இதன் பிறகு வில்லியம் தம்பதிகள் வீடற்ற குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

    இரவு வில்லியம் தம்பதிகள் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×