search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் போதை பொருள் கடத்திய போலீஸ் அதிகாரி கைது
    X

    கேரளாவில் போதை பொருள் கடத்திய போலீஸ் அதிகாரி கைது

    • போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் போலீஸ் அதிகாரியை பொறி வைத்து பிடிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
    • போதை பொருள் விற்பனை நடைபெறும் பகுதியில் மாறுவேடத்தில் சுற்றிய போலீசார் அங்கு போதை பொருள் விற்பனை செய்ய வந்த ஷானவாஸ் என்பவரை பிடித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதில் இடுக்கி மாவட்டம் முதலகோடம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் போலீசார் துணையுடன் போதை பொருள் விற்பனை நடைபெறுவது தெரியவந்தது.

    போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் போலீஸ் அதிகாரியை பொறி வைத்து பிடிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி போதை பொருள் விற்பனை நடைபெறும் பகுதியில் மாறுவேடத்தில் சுற்றிய போலீசார் அங்கு போதை பொருள் விற்பனை செய்ய வந்த ஷானவாஸ் என்பவரை பிடித்தனர்.

    இவர் இடுக்கியில் உள்ள ஆயுதபடை முகாமில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரை கைது செய்த போலீசார், இதுபற்றிய தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×