என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிப்ரவரி 5-ந்தேதி முதல் டெல்லியில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் தொடக்கம்
Byமாலை மலர்29 Jan 2021 2:52 PM GMT (Updated: 29 Jan 2021 2:52 PM GMT)
டெல்லியில் ஏற்கனவே 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 5-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன.
டெல்லியில் ஜனவரி 18-ந்தேதி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் 9-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் பிப்ரவரி 5-ந்தேதியில் இருந்து திறக்கப்படும் என டெல்லி மாநில துணை முதல்வரும், அம்மாநில கல்வித்துறை அமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிகிரி டிப்ளோமா இன்ஸ்டிடியூசன்களும் திறக்கப்படும். அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும். மாணவர்கள் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X