search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.பி.சி. பக்தி சேனல்
    X
    எஸ்.வி.பி.சி. பக்தி சேனல்

    திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி காணிக்கை- சென்னை தம்பதியர் வழங்கினர்

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.பி.சி. பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்களான காமாட்சி-சங்கர் தம்பதியர் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினர்.
    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.பி.சி. பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்களான காமாட்சி-சங்கர் தம்பதியர் ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினர். அந்தக் காணிக்கை தொகையை தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலரும், பக்தி சேனல் மேலாண்மை இயக்குனருமான ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக்கொண்டார்.

    அந்தப் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர். அவர்கள், திருமலை நாதநீராஞ்சன மண்டபத்தில் நடந்த சுந்தர காண்ட பாராயணத்தில் பங்கேற்று பக்தி பாடல்களை பாடினர்.
    Next Story
    ×