என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உத்தர பிரதேசத்தில் இரண்டு பேரை அடித்துக் கொன்ற புலி
Byமாலை மலர்3 April 2020 9:32 PM IST (Updated: 3 April 2020 9:32 PM IST)
உத்தர பிரதேசத்தில் பயிர்க்காவலுக்காக வயல்வெளியில் படுத்திருந்த இருவரை புலி ஒன்று அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் பிலிபிட் புலிகள் சரணாலயம் உள்ளது. இந்த பகுதியில் உள்ளூர் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். நேற்றிரவு நிந்தர் சிங் (வயது 50), அவருக்கு உதவியாக டோரிலால் (28) ஆகியோர் காட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக வயல்வெளியில் தங்கினர்.
நள்ளி்ரவு அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது சரணாலயத்தில் உள்ள புலி இருவரையும் அடித்து கொன்றுள்ளது. அத்துடன் அவர்கள் படுத்திருந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் வரை அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்று தாக்கியுள்ளது.
நிந்தர் சிங்கின் சகோதரர் கொடுத்த தகவல்படி போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று புலியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை அந்த புலி பிடிப்பட்டது. அதை லக்னோவில் உள்ள உயிரியல் பூங்காக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர். இருவரை புலி அடித்துக் கொன்ற சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X