search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு
    X
    மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு

    பிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா - பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

    பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    2019-பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் கட்சியினருக்கு பாஜகாவிற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. 

    வடமாநிலங்களில் புதிய குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் சுக்லாவுக்கு எதிரான சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை போன்ற விவகாரங்களில் மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமூல் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வந்துள்ளார்.

    பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுக்கும் மம்தா பானர்ஜி

    இந்நிலையில், பிரதமர் மோடியை மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, இந்தியை தேசிய மொழியாக்கும் பிரச்சனை, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
    Next Story
    ×