என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்காணிக்க விஜய் ரூபானி உத்தரவு ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்காணிக்க விஜய் ரூபானி உத்தரவு](https://img.maalaimalar.com/Articles/2019/Jun/201906140836069807_Vijay-Rupani-ordered-for-24-hours-vayu-storm-moved-towards_SECVPF.gif)
X
ஓமனை நோக்கி நகர்ந்தது வாயு புயல்: 24 மணி நேரம் கண்காணிக்க விஜய் ரூபானி உத்தரவு
By
மாலை மலர்13 Jun 2019 5:24 PM GMT (Updated: 14 Jun 2019 3:06 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
குஜராத்தை அச்சுறுத்தி வந்த வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்தது. இன்னும் 24 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக இருக்க முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது மழை பெய்யும் என காத்திருக்கின்றனர் மக்கள். இந்நிலையில் மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அரபிக்கடலில் உருவானது வாயு புயல்.
இந்த புயல் குஜராத்தை தாக்கும் என முதலில் கூறப்பட்டது. இதனால் கடலோர பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் தெரிவித்தது. வாயு புயல் திசை மாறி ஓமனை நோக்கி நகர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளது. ஆனாலும் குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201906140836069807_1_storm._L_styvpf.jpg)
இதனையடுத்து இன்னும் 24 மணி நேரம் முன்னெச்சரிக்கையாக இருக்க அம்மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். 10 மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மாகிம் கடற்கரை பகுதியில் பலத்த மழை மற்றும் காற்று வீசுவதால் அந்த பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)