search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஜம்மு காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலி - ஒருவர் படுகாயம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மச்சில் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் பலியானதாகவும், ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் உள்ள மச்சில் செக்டாரில் இன்று மாலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த ராணுவ வீரர்கள் முகாம் சிக்கியது. இதனையடுத்து, பனியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

    இந்த கோர விபத்தில் 3 வீரர்கள் பலியானதாகவும், 1 வீரர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
    Next Story
    ×