search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் நிலைமை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராணுவ தளபதி ஆலோசனை
    X

    காஷ்மீர் நிலைமை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் ராணுவ தளபதி ஆலோசனை

    காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலைமை குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் நேற்று அழைத்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசுபவர்களுக்கு எதிராக ராணுவ வாகனத்தில் வாலிபரை கட்டி வைத்து மனித கேடயமாக ராணுவத்தினர் சென்றதாக சமூகவலைத்தளங்களில் வீடியோ பரவியது. இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலைமை குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் நேற்று அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போதைய நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் ராணுவ தளபதி விரிவாக எடுத்துக்கூறியதுடன் காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த கூட்டம் 30 நிமிட நேரம் நீடித்தது.
    Next Story
    ×