search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாச்சல முன்னாள் முதல்-மந்திரி கலிகோபுல் தற்கொலை பற்றி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் மனு
    X

    அருணாச்சல முன்னாள் முதல்-மந்திரி கலிகோபுல் தற்கொலை பற்றி விசாரணை: சுப்ரீம் கோர்ட்டில் மனு

    அருணாச்சல முன்னாள் முதல்-மந்திரி கலிகோபுல் தற்கொலை பற்றி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    அருணாச்சலப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கலிகோ புல். இவரது ஆட்சி நம்பிக்கை தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் பதவி விலகினார். தலைநகர் ஈட்டா நகரில் அரசு இல்லத்தில் தங்கி இருந்த போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கலிகோபுல் தற்கொலைபற்றி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும என்று கோர்ட்டில் வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

    Next Story
    ×