என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் கேரள பெண் ஊழியரை குத்திக்கொன்ற கொள்ளையர்கள் மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் கேரள பெண் ஊழியரை குத்திக்கொன்ற கொள்ளையர்கள்](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702081206374754_Kerala-woman-murder-case-police-inquiry_SECVPF.gif)
மஸ்கட் நட்சத்திர ஓட்டலில் கேரள பெண் ஊழியரை குத்திக்கொன்ற கொள்ளையர்கள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆரியநாடு பகுதியை சேர்ந்தவர் சிந்து (வயது 42). இவரது கணவர் பெயர் சுரேஷ். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் சிந்து கணவரை பிரிந்து தனது மகனுடன் தாய் சுகுமாரி வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு மகனுடன் வசித்துவந்தார்.
இந்த நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு சிந்துவுக்கு மஸ்கட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை கிடைத்தது. இதைதொடர்ந்து அவர் மகனை தாய் வீட்டில் விட்டுவிட்டு மஸ்கட் சென்று விட்டார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சிந்து ஓட்டலில் பணியில் இருந்த போது ஒரு கொள்ளை கும்பல் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு புகுந்தது. அப்போது சிந்து அவர்களை தடுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் கத்தியால் அவரை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் சிந்து உயிர் இழந்து விட்டார்.
இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்த்த போது 4 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கைது செய்தனர். அவன் ஏமன் நாட்டை சேர்ந்தவன் ஆவான். மற்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிந்து இறந்த தகவல் கிடைத்ததும் அவரது தாயும், குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது உடலை கேரளா கொண்டுவர அவர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)