என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி](https://img.maalaimalar.com/Articles/2017/Feb/201702011810072910_underconstruction-building-collapses_SECVPF.gif)
X
கட்டுமான பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலி
By
மாலை மலர்1 Feb 2017 12:40 PM GMT (Updated: 1 Feb 2017 12:40 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டுவந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரின் ஜாஜ்மாவ் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த ஓர் ஆண்டாக ஆறு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டுமானப் பணியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கட்டிடம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென கட்டிடம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தால் பல தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த இடத்திற்கு உடனே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், பலியான 7 தொழிலாளர்களின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. படுகாயத்துடன் மீட்கப்பட்ட சுமார் 30 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் இன்னும் யாரும் சிக்கியுள்ளனரா? என மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கட்டிடத்திற்கு வலுவான அடித்தளம் இல்லாததே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)