என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டை வரிசையில் நிற்க வைத்தவர்களுக்கு எங்கள் கூட்டணி பதில் சொல்லும்: ராகுல், அகிலேஷ் கூட்டாக பேட்டி
Byமாலை மலர்29 Jan 2017 9:31 AM GMT (Updated: 29 Jan 2017 9:31 AM GMT)
நாட்டை வரிசையில் நிற்க வைத்தவர்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி பதில் சொல்லும் என்று லக்னோவில் ராகுல் காந்தி, அகிலேஷ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் முனைப்பில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சிகள் கை கோர்த்துள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவரும் இன்று லக்னோ நகரில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, நாட்டை வரிசையில் நிற்க வைத்தவர்களுக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி பதில் சொல்லும் என்று தெரிவித்தனர்.
பேட்டியில் ராகுல்காந்தி பேசியதாவது:-
தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியிலும் எனக்கும் அகிலேஷுக்கும் கூட்டணி உண்டு. காங்கிரஸ், சமாஜ்வாடி கூட்டணி
பிரித்தாளும் அரசியலுக்கு விடை கொடுக்கும்.
எங்கள் கூட்டணி கங்கா, யமுனா நதிகள் சங்கமித்துள்ளதை போன்றது. இந்த கூட்டணியால் வளர்ச்சி என்றும் சரஸ்வதி வெளியே வருவாள். இது வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி தற்போது விவாதத்திற்கு வந்துள்ளது.
பிரியங்கா காந்தி எப்பொழுதும் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்து வருகிறார். பிரச்சாரத்திற்கு வரவேண்டுமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்வார்.
இதற்கு முன்பு கூட நான் அகிலேஷை பாராட்டி இருக்கிறேன். முக்கியமானது என்னவென்றால் அவர் நல்ல முறையில் பணி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகிலேஷ் யாதவ் கூறுகையில், “சைக்கிளின் இரண்டு சக்கரங்களை போன்றவர்கள் நாங்கள். எங்களுக்கு இடையில் வயதில் கூட அதிக வித்தியாசம் இல்லை. உத்தரபிரதேசத்தை வளமான பாதையில் ராகுலும், நானும் கொண்டு செல்வோம். நாட்டின் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றிற்காகவே சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம்” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போதி பிரச்சாரம் திட்டம் குறித்து எந்த அறிவிப்பையும் அவக்ரள் வெளியிடவில்லை. சோனியா காந்தியும், முலாயம் சிங்கும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வது குறித்த கேள்விக்கு அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X