என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தைரியம் இருந்தால் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள்: கெஜ்ரிவாலுக்கு அம்ரீந்தர் சிங் சவால்
Byமாலை மலர்27 Jan 2017 11:00 PM GMT (Updated: 27 Jan 2017 11:07 PM GMT)
தைரியம் இருந்தால் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அம்ரீந்தர் சிங் கேள்வி எழுப்பினார்.
அமிர்தசரஸ்:
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் அகாலி தளம் - பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் அகாலி தளம் - பாஜ கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது 3 நாள் தேர்தல் பரப்புரையை நேற்று பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கினார். மஜிதா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவரான அம்ரிந்தர் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார்.
இதனையடுத்து கூட்டத்தில் பேசிய அம்ரீந்தர் சிங் தைரியம் இருந்தால் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும் ஆம் ஆத்மி கட்சியின் நம்பத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிய அவர் கட்சி முற்றியலும் அந்நியத் தன்மை கொண்டதாக விமர்சித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X