என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.பி.எஸ். அதிகாரி கே.விஜயகுமார் எழுதிய சந்தன கடத்தல் வீரப்பன் பற்றிய புத்தகம்
Byமாலை மலர்27 Jan 2017 7:28 PM GMT (Updated: 27 Jan 2017 7:28 PM GMT)
ஐ.பி.எஸ். அதிகாரியும் உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.
புதுடெல்லி:
தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 20 ஆண்டுகளாக மறைந்திருந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். ‘வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்’ என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் வீரப்பன் அரங்கேற்றிய கொலைகள், கடத்தல், குறிப்பாக கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாட்கள் சிறை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன.
ரூபா பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தில், வீரப்பன் 1952-ம் ஆண்டு கோபிநத்தத்தில் பிறந்தது முதல் 2004-ல் கொல்லப்பட்டது வரையிலான முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒரு சிறிய வேட்டைக்காரனாக வாழ்க்கையை தொடங்கிய வீரப்பன் 3 மாநிலங்களை எவ்வாறு ஆட்டிப்படைத்தார்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.பி.எஸ். அதிகாரியான கே.விஜயகுமார் விவரித்துள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் 20 ஆண்டுகளாக மறைந்திருந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சந்தன கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு தமிழக சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார். ‘வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்’ என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில் வீரப்பன் அரங்கேற்றிய கொலைகள், கடத்தல், குறிப்பாக கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி 108 நாட்கள் சிறை வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்று உள்ளன.
ரூபா பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தில், வீரப்பன் 1952-ம் ஆண்டு கோபிநத்தத்தில் பிறந்தது முதல் 2004-ல் கொல்லப்பட்டது வரையிலான முக்கியமான நிகழ்வுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஒரு சிறிய வேட்டைக்காரனாக வாழ்க்கையை தொடங்கிய வீரப்பன் 3 மாநிலங்களை எவ்வாறு ஆட்டிப்படைத்தார்? உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.பி.எஸ். அதிகாரியான கே.விஜயகுமார் விவரித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X