என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் உறைப்பனி: நெடுஞ்சாலை மூடல் - நான்காவது நாளாக விமானச் சேவைகள் ரத்து
Byமாலை மலர்27 Jan 2017 6:25 AM GMT (Updated: 27 Jan 2017 6:25 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் உறைப்பனியால் நான்காவது நாளாக இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையும் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து உறைப்பனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மட்டும் 2 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.
பல இடங்களில் மைனஸ் 0.8 அளவில் இங்கு குளிர் நிலவுவதால் மக்கள் வெளியே வர அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 சென்டிமீட்டர் அளவுக்கு பனி பொழிந்துள்ளது. இங்கு மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.
காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதாலும், பனி மூட்டம் சூழ்ந்துள்ளதாலும் நான்காவது நாளாக இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து உறைப்பனி பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக, ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மட்டும் 2 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டது.
பல இடங்களில் மைனஸ் 0.8 அளவில் இங்கு குளிர் நிலவுவதால் மக்கள் வெளியே வர அஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வடக்கு காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41 சென்டிமீட்டர் அளவுக்கு பனி பொழிந்துள்ளது. இங்கு மைனஸ் 4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் நிலவுகிறது.
காஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் பகுதியை மாநிலத்தின் பிறபகுதிகளுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகர் விமான நிலைய ஓடுபாதை முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதாலும், பனி மூட்டம் சூழ்ந்துள்ளதாலும் நான்காவது நாளாக இன்றும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X