என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் சர்க்கரைக்கு மானியம் ரத்து: மத்திய அரசு முடிவு
Byமாலை மலர்27 Jan 2017 4:18 AM GMT (Updated: 27 Jan 2017 5:54 AM GMT)
மத்திய அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய இருக்கும் புதிய பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கச் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
பொதுச் சந்தையில் இருந்து சர்க்கரையை மாநில அரசுகள் கொள்முதல் செய்து அதை ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.13.50 என்ற மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றன. அதற்காக கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் 40 கோடி பேர் பலன் அடைகிறார்கள்.
மத்திய அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய இருக்கும் புதிய பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் யார் என்று வரையறுக்கப்படாத நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியானதாக இருக்காது என்றும், சர்க்கரை மானிய தொகையை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
எனவே அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4500 கோடி மிச்சமாகும்.
சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உணவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரியப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மலிவு விலையில் சர்க்கரை கிடைக்கச் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
பொதுச் சந்தையில் இருந்து சர்க்கரையை மாநில அரசுகள் கொள்முதல் செய்து அதை ரேஷன் கடைகள் மூலம் கிலோ ரூ.13.50 என்ற மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றன. அதற்காக கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் 40 கோடி பேர் பலன் அடைகிறார்கள்.
மத்திய அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய இருக்கும் புதிய பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் யார் என்று வரையறுக்கப்படாத நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது சரியானதாக இருக்காது என்றும், சர்க்கரை மானிய தொகையை மாநில அரசுகள் தவறாக பயன்படுத்தலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
எனவே அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4500 கோடி மிச்சமாகும்.
சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உணவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே தெரியப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X