என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் சட்டசபை தேர்தல்: 3 நாள் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி
Byமாலை மலர்26 Jan 2017 10:07 PM GMT (Updated: 26 Jan 2017 10:07 PM GMT)
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது 3 நாள் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்.
அமிர்தசரஸ்:
117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு தற்போது ஷிரோன்மணி அகாலி தளம் - பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் அகாலி தளம் - பாஜ கூட்டணி, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனது 3 நாள் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் மஜிதா பகுதியில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் இன்று கலந்து கொள்கிறார். அதனையடுத்து, முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலின் லம்பி தொகுதி, துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் ஜலலாபாத் தொகுதி ஆகியவற்றில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மற்றொரு மாநிலமான கோவாவிற்கு ஜனவரி 30-ம் தேதி செல்ல திட்டமிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X