search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர்: பனிச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குரேஸ் எல்லைக்கோடுப் பகுதி அருகே பனிச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குரேஸ் எல்லைக்கோடுப் பகுதி அருகே உள்ள படூகம் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவு ஒரு வீட்டின் மீது விழுந்து முற்றிலுமாக மூடியது. அந்த வீட்டினுள் இருந்த லோனே(55), அவரது மனைவி அஸிஸி(50), அவர்களின் மகன் இர்பான்(22), மகள் குல்ஷன்(19) ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் குளிரால் ரத்தம் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பனிக்குவியலில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு மகனான ரியாஸ் அஹமத் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×