என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்தி முன்னிலையில் கிரிக்கெட் வீரர் சித்து காங்கிரசில் இணைந்தார்
Byமாலை மலர்15 Jan 2017 8:42 AM GMT (Updated: 15 Jan 2017 8:42 AM GMT)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து இன்று காங்கிரசில் இணைந்தார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராகவும், தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
பா.ஜனதாவில் எம்.பி.யாக இருந்த சித்து அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விலகினார். அதோடு தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
பா.ஜனதாவில் இருந்து விலகிய சித்துவை இழுக்க ஆம் ஆத்மி முயன்றது. ஆனால் அவர் அங்கு செல்ல மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இணையும் ஆர்வத்தில் இருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை இன்று சித்து சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்து போட்டியிடுகிறார். அவர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார். இது அவரது மனைவி கடந்த தேர்தலில் வென்ற தொகுதியாகும்.
சித்துவின் மனைவி கவூர் ஏற்கனவே பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். தற்போது சித்துவின் வருகை மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் தற்போது டெலிவிஷன் வர்ணனையாளராகவும், தொகுப்பாளராகவும் இருக்கிறார்.
பா.ஜனதாவில் எம்.பி.யாக இருந்த சித்து அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விலகினார். அதோடு தனது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார்.
பா.ஜனதாவில் இருந்து விலகிய சித்துவை இழுக்க ஆம் ஆத்மி முயன்றது. ஆனால் அவர் அங்கு செல்ல மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இணையும் ஆர்வத்தில் இருந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை இன்று சித்து சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலில் சித்து போட்டியிடுகிறார். அவர் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார். இது அவரது மனைவி கடந்த தேர்தலில் வென்ற தொகுதியாகும்.
சித்துவின் மனைவி கவூர் ஏற்கனவே பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார். தற்போது சித்துவின் வருகை மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X