search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி
    X

    பீகார் படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் - பிரதமர் மோடி

    பீகார் மாநிலத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பீகார் தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள கங்கை ஆற்றில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த கோர விபத்தில் பலியானர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று இரங்கல் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்த 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×