search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து முழுவதும் சுதந்திரமானது: கபில் சிபில் கருத்து
    X

    ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து முழுவதும் சுதந்திரமானது: கபில் சிபில் கருத்து

    ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து சுதந்திரமாக செயல்படுவதற்காக உருவாக்கப்பட்டது என்று முன்னாள் காங்கிரஸ் மந்திரி கபில் சிபில் கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்யும் சங்கம், ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கவர்னர் உர்ஜித் படேலுக்கு வலியுறுத்தினர்.

    மத்திய அரசு மத்திய ரிசர்வ் வங்கியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஆர்பிஐ சங்கம் கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் மூலம் தனித்துவத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தினர்.

    இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்திற்கு காங்கிரஸ் முன்னாள் மந்திரி கபில் சிபில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபில் ரிசர்வ் வங்கி மத்திய அரசில் இருந்து முழுவதுமாக சுதந்திரமாக செயல்படுதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறினார்.
    Next Story
    ×