என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
Byமாலை மலர்6 Jan 2017 2:20 PM GMT (Updated: 6 Jan 2017 2:20 PM GMT)
கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்:
வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்வது போல் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது.
வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன. 4 நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவால் காஷ்மீரை பிற மாநிலங்களுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வான்வழி போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக இன்றும் இந்த நிலை நீடித்தது.
இந்த நிலையில், காஷ்மீரில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தையும் காஷ்மீர் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களில் பிற வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கூறினார்.
வடமாநிலங்களில் குளிர் அதிகமாக இருக்கிறது. காஷ்மீர், இமாசலபிரதேம் ஆகிய மாநிலங்களில் பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்வது போல் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகளில் பனி உறைந்து கிடக்கிறது.
வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன. 4 நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவால் காஷ்மீரை பிற மாநிலங்களுடன் இணைக்கும் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. வான்வழி போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக இன்றும் இந்த நிலை நீடித்தது.
இந்த நிலையில், காஷ்மீரில் ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தையும் காஷ்மீர் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு நாட்களில் பிற வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X