search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை 9-ம் தேதி வெளியிடுகிறது காங்கிரஸ்
    X

    பஞ்சாப் தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியலை 9-ம் தேதி வெளியிடுகிறது காங்கிரஸ்

    பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி வேட்பாளர் பட்டியலை 9-ம்தேதி வெளியிடப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இதுபற்றி கட்சியின் மாநில தலைவர் அமரீந்தர் சிங் இன்று சண்டிகரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் சார்பில் 77 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 40 வேட்பாளர்களை அறிவிப்பதில் கட்சி தாமதம் செய்வதாக பேசப்படுவது உண்மையல்ல. பா.ஜ.க. கூட இதுவரை எந்த வேட்பாளரையும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 9-ம் தேதி வெளியிடப்படும்.

    சித்துவோ அல்லது அவரது மனைவியோ அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் நிறுத்தப்படவேண்டும். சித்து எங்கள் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர் ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×