என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்
Byமாலை மலர்5 Jan 2017 11:59 PM GMT (Updated: 5 Jan 2017 11:59 PM GMT)
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
புதுடெல்லி:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பழரசம் வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் டெல்லியில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நிலவும் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக உண்ணாவிரதத்தின் 4-வது நாளான நேற்று உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மயங்கி விழுந்தார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முயற்சிகள் எடுக்கும் என்று உறுதி அளித்தார்.
மேலும் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்கள் அனைவரும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை ஏற்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அவர்களுக்கு பழரசம் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி டெல்லியில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பழரசம் வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் டெல்லியில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் இந்த போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் நிலவும் கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக உண்ணாவிரதத்தின் 4-வது நாளான நேற்று உண்ணாவிரதம் இருந்த இளைஞர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் மயங்கி விழுந்தார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு முயற்சிகள் எடுக்கும் என்று உறுதி அளித்தார்.
மேலும் உண்ணாவிரதம் இருந்த இளைஞர்கள் அனைவரும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை ஏற்று ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு பேரவையினர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அவர்களுக்கு பழரசம் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X