என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 ஸ்டார் ஓட்டலில் அமெரிக்க பெண் கற்பழிப்பு வழக்கில் நான்கு பேர் கைது
Byமாலை மலர்26 Dec 2016 2:18 PM GMT (Updated: 26 Dec 2016 2:18 PM GMT)
டெல்லியில் 5 ஸ்டார் ஓட்டலில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு கும்பல் அவரை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து கற்பழித்தது.
மேலும், இதுகுறித்து வெளியில் தகவல் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், கற்பழிப்பு சம்பவத்தை படம் எடுத்து வைத்துள்ளோம். அதை பொதுமக்களிடம் பரப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். பல மாதங்கள் கடந்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விடவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அந்த பெண்மணி, டெல்லி போலீசாரின் விசாரணையில் திருப்தியில்லை. கற்பழிப்பு கும்பலை அடையாளம் காட்ட தான் தயாராக இருக்கிறேன். இதற்காக இந்தியா வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த அவர், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தன்னுடைய புகாரை மீண்டும் தெரிவித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயரை வெளியிட மறுத்து விட்டனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘சுற்றுலா வழிகாட்டு, டிரைவர், கிளீனர், ஓட்டல் ஊழியர் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம். அடையாளம் அணிவகுப்பு நடத்தும் வரை அவர்கள் பெயரை வெளியிட முடியாது’’ என்று கூறிவிட்டார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தார். அவர் டெல்லியில் உள்ள 5 ஸ்டார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும்போது ஒரு கும்பல் அவரை இரண்டு நாட்கள் அறையில் அடைத்து வைத்து கற்பழித்தது.
மேலும், இதுகுறித்து வெளியில் தகவல் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், கற்பழிப்பு சம்பவத்தை படம் எடுத்து வைத்துள்ளோம். அதை பொதுமக்களிடம் பரப்பிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். பின்னர் அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். பல மாதங்கள் கடந்தும் போலீசார் விசாரணையை முடுக்கி விடவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அந்த பெண்மணி, டெல்லி போலீசாரின் விசாரணையில் திருப்தியில்லை. கற்பழிப்பு கும்பலை அடையாளம் காட்ட தான் தயாராக இருக்கிறேன். இதற்காக இந்தியா வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த அவர், ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தன்னுடைய புகாரை மீண்டும் தெரிவித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் பெயரை வெளியிட மறுத்து விட்டனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘சுற்றுலா வழிகாட்டு, டிரைவர், கிளீனர், ஓட்டல் ஊழியர் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளோம். அடையாளம் அணிவகுப்பு நடத்தும் வரை அவர்கள் பெயரை வெளியிட முடியாது’’ என்று கூறிவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X