என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.400 கோடி கள்ள நோட்டு ஒழிக்கப்பட்டுவிட்டது: மத்திய அரசு தகவல்
Byமாலை மலர்25 Nov 2016 7:51 AM GMT (Updated: 25 Nov 2016 7:52 AM GMT)
தீவிரவாதிகள் தேச விரோதிகள் வசம் இருந்த ரூ.400 கோடி கள்ள நோட்டு ஒழிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதுவரை 14 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று முதல் புதிய ரூ.500 நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய ரூ.500,ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் 27 பக்க பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது. கருப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பினாமி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
70 ஆண்டுகளாக கருப்பு பணம் குவிக்கப்பட்டு வருகிறது. அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புழக்கத்தில் இருந்த ரூ.14 லட்சம் கோடி பணம் வெளியே வந்துள்ளது. அவைதிரும்ப பெறப்பட்டுள்ளது.
மேலும் ரூ.500 கோடி கள்ளநோட்டுகளும் வீணாகி விட்டன. கள்ளநோட்டுகளை தீவிரவாதிகளும் தேசவிரோத சக்திகளும் பயன்படுத்தி வந்தனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் வீணாகி விட்டன.
தீவிரவாதிகளிடம் தாராளமாக கள்ள நோட்டுகள் நடமாடுகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தாலும் மனித உயிர்கள் பலியாகிறது. தாராள பண புழக்கத்தால்தான் மனித உயிர்கள் பலியாகும் பேரழிவு ஏற்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் மக்கள் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர். இதுவரை 14 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. நேற்று முதல் புதிய ரூ.500 நோட்டுகளும் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய ரூ.500,ரூ.1000 நோட்டுகள் ஒழிப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் 27 பக்க பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கருப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கவே மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது. கருப்பு பணத்தை ஒழிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. பினாமி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
70 ஆண்டுகளாக கருப்பு பணம் குவிக்கப்பட்டு வருகிறது. அதை வெளிக்கொண்டு வரும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புழக்கத்தில் இருந்த ரூ.14 லட்சம் கோடி பணம் வெளியே வந்துள்ளது. அவைதிரும்ப பெறப்பட்டுள்ளது.
மேலும் ரூ.500 கோடி கள்ளநோட்டுகளும் வீணாகி விட்டன. கள்ளநோட்டுகளை தீவிரவாதிகளும் தேசவிரோத சக்திகளும் பயன்படுத்தி வந்தனர். அவர்களிடம் இருந்த கள்ளநோட்டுகள் அனைத்தும் வீணாகி விட்டன.
தீவிரவாதிகளிடம் தாராளமாக கள்ள நோட்டுகள் நடமாடுகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தாலும் மனித உயிர்கள் பலியாகிறது. தாராள பண புழக்கத்தால்தான் மனித உயிர்கள் பலியாகும் பேரழிவு ஏற்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X